Wednesday, November 25, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 7

 

காவ்யா சொன்னதால் அந்த எண்ணுக்கு அழைத்துவிட்டாலும் அரவிந்தன் மனதில் மோனாவை பற்றிய அச்சம் இல்லாமலில்லை. நியூயார்க் ஆஃபீசில் கேன்டீனில் முதன் முதலில் தன் விருப்பத்தை அவள் சொன்னது அவன் நினைவுகளில் வந்து போனது.

மோனா டெல்லியில் பிறந்து வளர்ந்த,  அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒரே செல்ல பெண். அவளது அழகும் படிப்பும் சற்றே கர்வத்தையும் தந்துவிட்டிருக்க,  எப்போதும் கண்களில் சற்று அலட்சியமும் நுனிநாக்கு ஆங்கிலமுமாய் கூட வேலை பார்ப்பவர்களை சற்று எட்டிதான் இருக்க வைத்திருந்தது. 

ஒரு சிலரை தவிர மற்ற ஆண்களின் கண்கள் ரகசியமாய் தன்னை அளக்கும்போது, அரவிந்தனின் கண்ணியமும் அவனது வசீகரமும் அவளை ஈர்க்கத்தான் செய்தது.  அவள் வேலையில் சேர்ந்ததும் அவளுக்கு ID கார்ட் வாங்குவது முதல், லேப்டாப் ஆர்டர் செய்து வரவைத்ததது, பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுத்தது, கிரெடிட் கார்டு அப்ளை செய்தது, தங்குமிடம் வசதி செய்து கொடுத்தது என்று அனைத்து உதவிகளையும் ரகு சொன்னத்தின் பேரில் செய்தாலும் தேவைக்கு மேல் எதுவும் பேசாது, அவளுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்து கொடுத்தவன் மேல் அவளையுமறியாமல் மரியாதையும் கூடவே காதலும் பிறந்தது.

படிக்கும் காலத்திலிருந்தே ஆண்களும் நண்பர்களாக இருந்த போதிலும் யாரிடமும் தோணாத ஒரு உணர்வு அரவிந்தனிடம் பேசும்போதும் பழகும்போதும் இருப்பதாக உணர்ந்தாள். தன் விருப்பத்திற்கு தன்  பெற்றோரும், தன்னைப்போல அறிவான அழகான பெண்ணுக்கு அரவிந்தனும் மறுப்பு சொல்ல மாட்டார்கள் என்ற அசையாத நம்பிக்கையோடு பழகிய ஒரு மாதத்திலேயே தன் விருப்பத்தை அவனிடம் சட்டென்று ஒருநாள் போட்டு உடைத்தாள்.

முதலில் அதிர்ந்தாலும் பின்னர் தன் முடிவை அழுத்தமாக அதே சமயம் அவள் மனம் நோகாமல் எடுத்து சொன்னவன் அவளது கண்களில் தெரிந்த ஆத்திரத்தை கண்டதும் ஆடி போனான்.

 "அரவிந்த், இதுவரைக்கும் எத்தனை பேர் என்ன ப்ரொபோஸ் பண்ணியிருப்பாங்க உங்களுக்கு தெரியுமா? இப்ப கூட நான் ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. டெல்லில எத்தனை ஹை கிளாஸ் families அவங்க பசங்களுக்கு என்னை கேட்டு என் பேரன்ட்ஸ்க்கு தினமும் போன் பண்றாங்க தெரியுமா? யாருக்கும் ஓகே சொல்லாம உங்களை ப்ரொபோஸ் பண்றேன்னா எனக்கு உங்களை அவ்வளவு பிடிச்சிருக்குன்னு ஏன் உங்களுக்கு புரியல? இந்த காலத்துல வந்து மாமா பொண்ண லவ் பண்றேன் அத்தை பொண்ண லவ் பண்றேன்னு.. உங்க லைப் ஸ்டைலுக்கு எப்படி அந்த பொண்ணு ஒத்து வருவா.. ப்ராக்டிகலா யோசிச்சி பாருங்க " என்று  வார்த்தைகளில் அனல் அடிக்க அவள் பேசியது இன்னமும் அவன் காதில் ஒலித்தது.

பொறுமையை இழந்தவன் "மோனா.. திஸ் ஐஸ் யுவர் லிமிட்.. என் லைஃப் பத்தி நீங்க கவலைப்படவேணாம்..என் லைஃப் ஸ்டைல்க்கு யாரு ஒத்துவருவாங்கன்னு நீங்க டிசைட் பண்ணதேவையில்லை.. and I love Kavya more than anything in the world " என்றதும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர "என்ன அழவச்சிட்டு நீ எப்படி நிம்மதியா இருக்கபோறேன்னு நானும் பாக்குறேன்" என்று விருட்டென்று எழுந்து போனாள்.

அதற்கடுத்த இரண்டு நாட்களில் அவள் அலுவலகம் வராமலிருக்க, சற்று கலக்கமானவன் அவளது போனுக்கு அழைத்தபோதும் எதிர்முனையில் எவ்வித பதிலும் இல்லை. கோபத்தில் பேசினாலும் அவளது மனம் புண்படுமாறு தான் பேசியது தவறு என உணர்ந்து, அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பவும் பொறுமையாக எடுத்துசொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு ரகுவிடமிருந்து வந்த  போன் கால் அதிர்ச்சியை கொடுத்தது.

"ஹே அரவிந்த் .. மேட்டர் கொஞ்சம் சீரியஸ் .. என்றவன் தயங்கியபடியே “ மோனா நேத்தெல்லாம் ரொம்ப depressed ஆ இருந்திருக்கா.. ஷோபாகிட்ட போன்ல அழுதுகிட்டே அரவிந்த் ரொம்ப hurt பண்ணிட்டாருன்னு ஏதோதோ சொல்லியிருக்கா.. நேத்து நைட் ஸ்லீப்பிங் பில்ஸ் நெறய சாப்பிட்டு மயக்கமாகியிருக்கா.. நல்லவேளை.. அவளோட ரூம்மேட் பாத்து 911 க்கு கால் பண்ணிட்டாங்க…. Treatment  பண்ணி அவளை காப்பாத்திட்டாங்க..  இப்போதான்  ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு கால் வந்திச்சி..  இப்போ ஷி ஐஸ் ஓகே ..but police enquiry ல உன் பேரை சொல்லிட்டா it is going to be very serious.. நான் ஆல்ரெடி இந்தியால சீனியர் மேனேஜர்கிட்ட பேசிட்டேன்.. incase  அப்படி ஏதாவது problem வந்தா கூட manage பண்ணிக்கலாம்.. உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சதால company support  உனக்கு இருக்கு.. நானும் ஷோபாவும் உன்னை பிக்கப் பண்ண வந்திட்டு இருக்கோம்.. நேர்ல போய் அவகிட்ட பேசி எதுவும் issue ஆகாம பாத்துக்குவோம்… be ready “ என்று போனை வைத்ததும் அதிர்ச்சியில் ஒரு வினாடி விக்கித்து போனாலும் என்ன ஆனாலும் சரிதான்.. தன் மீது தவறு இல்லாதபோது தான் ஏன் கலங்கவேண்டும் என்று தீர்மானித்தவன் அவர்களோடு சென்று மோனாவை பார்த்தான். அவர்களோடு பேசியபடியே கண்களில் ஒருவித அலட்சியத்தோடு அரவிந்தனை "பார்த்தாயா.. உன்னை எப்படி அலறி அடித்து ஓடி வரவைத்தேன்" என்ற தொனியில் பார்த்தாள்.

ரகுவின் மனைவி ஷோபாவும் டெல்லியை சேர்ந்தவள் என்பதால் மோனாவும் அவளும் தோழிகளாகியிருந்தனர். பலவித பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அரவிந்தன் காவ்யா தான் தன் வாழ்க்கை என்று உறுதியாக இருக்க, ரகு தம்பதியினர் மோனாவின் பெற்றோருடன் பேசி அவளை நல்லபடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இவையனைத்தும் மின்னல் போல அவன் நினைவில் வந்துபோக, நெடுநேர அழைப்பிற்கு பின் எதிர்முனையில் "ஹலோ" என்று பெண்ணின் குரல் கேட்டது. தயக்கமாக அரவிந்த் " ஹலோ .. நான் அரவிந்த் பேசுறேன்" என்றதும்  "ஹே அரவிந்த்,  நான் ஷோபா பேசுறேன்..How are you? " என்று சினேகமாக அவள் பேசவும் "oh.. Hai Mrs. Raghu..” என்றுவிட்டு  "இந்த நம்பர் .." என்று இழுத்தான்.

என்ன நடந்திருக்கும் என்று சட்டென்று ஊகித்தவள் "ஓ அதுவா.. இது மோனாக்கு நான் வாங்கி கொடுத்த நம்பர் .. அவ இந்தியா போனதும் நான்தான் பர்சனல் நம்பர் ஆ யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ she has different number “ என்றவள்  "ஓகே நான் எதுக்கு கால் பண்ணேன் தெரியுமா.. இன்னைக்கு ஆகாஷுக்கு பர்த் டே.. ஈவினிங் சின்னதா பார்ட்டி வச்சிருக்கோம்.. சோ கண்டிப்பா ரெண்டு பேரும் வந்துடுங்க.. அப்படியே உங்க ஒய்ப்பையும் நாங்க பார்த்த மாதிரி இருக்கும்.." என்றதும் மனம் சிறிது நிம்மதி அடைய "OK Mrs. Raghu .. நாங்க வந்திடறோம்..thanks for inviting us " என்று விட்டு போனை வைத்தான்.

அரவிந்த் பேசி முடிக்கும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதிலும் சிறிது கலக்கம் இருக்கத்தான் செய்தது. பேசுவது ஷோபா என்பது புரிந்ததும் கொஞ்சம் நிம்மதியானவள், அவன் போனை வைத்ததுடன் "என்ன அத்தான்.. ரகு அண்ணா ஒய்ப்பா? " என்றாள்.

"ஹ்ம்ம் ஆமா.. நல்ல வேளை.. மோனா இல்ல..அவ நம்பரை ஷோபா யூஸ் பண்றாங்க போல.. ரகு பையனுக்கு இன்னைக்கு பர்த்டேவாம்.. ஈவினிங்  பார்ட்டிக்கு நம்மள இன்வைட் பண்ணாங்க.. போலாமா.. எப்படியும் எங்க டீம்ல எல்லாரும் வருவாங்க.. உனக்கும் எல்லாரையுமே பாத்த மாதிரி இருக்கும்..மோனாவும் கண்டிப்பா வருவா.. நீ அவளையும் பாத்த மாதிரி இருக்கும்" என்றான் குறும்பாக அவளை பார்த்தபடியே.

"நான் ஏன் அவங்கள பார்க்கணும் " என்று பொய்க்கோபத்துடன் அவள் வாய் சொன்னாலும் அவள் மனதில் தன் அத்தானுக்காக உயிரை விட துணிந்தவளை பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் இருந்ததை அறிந்தவனாய் "ஹே உன்ன பத்தி உனக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும்.. " என்று அவளை பின்புறமாய் அணைத்துக்கொண்டான்.

கழுத்தை சுற்றி அணைத்துக்கொண்ட கணவனின் கைகளை பற்றிகொண்டவள்  "அப்படியா.. இப்போ நான் என்ன நினைக்கிறேன் சொல்லுங்க பாப்போம்" என்றாள். "சொல்லவா.. சொல்லிடுவேன்.. சொல்லிடுவேன்.. " என்றவன் அவள் காதோரமாய் "இப்போ அத்தானை பார்த்து I love youன்னு சொல்லனும்னு நினைக்கிற.. கரெக்ட் ஆ" என்றான் கிசுகிசுப்பாய்.

காதலில் மனம் கிறங்க கண்களை மூடிகொண்டு  நாணசிரிப்புடன் "கரெக்ட் தான் அத்தான் " என்றவளை " நான் இப்போ என்ன நினைக்கிறேன் தெரியுமா .. " என்று மயக்கும் குரலில் சொன்னவன் அவளின் காதுமடல்களில் சூடான முத்தங்களை பதித்தான்.

 

மாலை ஆறு மணியளவில் அரவிந்தன் கிளம்பி ஷோபாவில் அமர்ந்தபடி விவேக்கிடம் போனில் பேசிக்கொண்டிருக்க, காவ்யா மிகவும் சிரத்தையோடு பெட்ரூமில் கிளம்பிக்கொண்டிருந்தாள். அதுவரை அருகிலிருந்து சீண்டிக்கொண்டிருந்தவனை  வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி,  கவனமாக அலங்கரித்துக்கொண்டிருந்தாள்.

அமெரிக்கா வந்த பிறகு முதல் பார்ட்டி என்பதாலும், அரவிந்தனோடு வேலை பார்ப்பவர்களையும்   அவர்களின் குடும்பத்தாரையும் முதன் முதலில் பார்க்கப்போவதாலும் புடவையில் வருவது என முடிவுசெய்து அரவிந்தனிடம் கேட்க, "உனக்கு comfortable ஆ இருந்தா saree ஓகேடா .. அதுவில்லாம நீ எது போட்டாலும் அழகா இருப்ப.. " என்று ஆரம்பித்து விட்டான்.

அரவிந்தனின் சர்ட்க்கு பொருத்தமாக அழகிய பர்பிள் நிற ஆர்கன்சா புடவையும் அதன் பார்டருக்கு பொருத்தமாக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அடர் பிங்க் நிற பிளவுசும் அணிந்து, பிரெஞ்சு பிரைடும் காதில் புதிய டிசைனில் பெரிய ஜிமிக்கியுமாக தேவதையாய் பளிச்சென்று கிளம்பி வந்தாள்.

அவளை பார்த்ததும், அவசரமாக பை சொல்லி போனை வைத்தவன் மனைவியின் அழகில் சொக்கித்தான் போனான். "ஹே காவ்யா, எவ்ளோ அழகா இருக்க தெரியுமா.. கொல்றடி என்னை" என்றபடியே அவளது அலங்காரம் கலையாமல் மெலிதாய் அணைத்து முத்தமிட்டான். கணவனின் பாராட்டுதலில் முகத்தில் பெருமை பொங்க "ஹ்ம்ம் அப்பறம்.. இவ்ளோ ஹாண்ட்ஷமான உங்களுக்கு கொஞ்சமாவது மேட்ச் ஆகணும்ல.." என்றபடியே கணவனின் சர்ட்டை சரிசெய்தவள் "போகலாம் அத்தான்.. நான் ரெடி" என்றாள்.

"ஹ்ம்ம் கண்டிப்பா போகணுமா.. இப்படியே உட்கார்ந்து பேசிட்டே இருக்கலாமே " என்றவனை பொய்கண்டிப்புடன் "அத்தான்.. விளையாடாதீங்க.. ஏற்கனவே லேட்.. போலாம் வாங்க "  என்று சிணுங்கியவளை பார்த்து "ஓகே ஓகே.. lets go " என்று சிரித்தபடியே கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

வீட்டிலிருந்து அரைமணி நேர பயணத்தில் அந்த அழகிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரகுவின் வீட்டை அடைந்தனர். வரிசையாக அணிவகுத்து நின்ற மாளிகை போன்ற வீடுகளை பார்த்ததும் "வாவ் அத்தான்.. அமெரிக்கால வீடெல்லாம் அபார்ட்மெண்ட் டைப்பிலதான் இருக்கும்னு நெனச்சேன்.. இந்த கம்யூனிட்டி அழகா இருக்கு அத்தான்.. வீடெல்லாம் பாக்க நம்ம தாத்தா வீடு மாதிரி இருக்குல்ல" என்று ஆச்சர்யாமானாள்.

"ஹ்ம்ம் ஆமாடா.. நீ மட்டும் இங்க செட்டில் ஆக ஓகேன்னு சொல்லு.. ரகு வீட்டு பக்கத்துலயே இதே மாதிரி வாங்கிடலாம் " என்றான்.

அவசரமாக "இல்ல அத்தான்.. நாம இதே மாதிரி ஆனா இந்தியால வாங்குவோம்..இப்போ நம்ம ரெண்டு பேருக்கு நம்ம வீடே ரொம்ப பெருசுதான்  " என்று சொல்லியபடியே காரிலிருந்து இறங்கியவள் புடவையை சரிசெய்து கொண்டாள்.

வரும் வழியில் வாங்கிக்கொண்ட  கிப்ட்களை காவ்யா எடுத்துக்கொள்ள, ஜோடியாக இருவரும் வீட்டினுள்ளே நுழைந்தனர். வீடு முழுதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பட்டிருக்க, குழந்தைகள் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர். வாசலிலேயே அவர்களை பார்த்த ரகு, மனைவியை அழைக்க, தம்பதியராய் இருவரும் அரவிந்தனையும் காவ்யாவையும் வரவேற்றனர். காவ்யாவின் அழகில் சற்றே தடுமாறிய ஷோபா நாற்பதின் ஆரம்பத்தில் படிப்புகளையோடு ஸ்லீவ்லெஸ் பிளவுசும் லைட் வெயிட் பட்டுபுடவையுமாய் சிரித்தமுகத்தோடு வரவேற்றாள்.

"ஹாய் ஹண்ட்ஸம்" என்று அரவிந்தனை வரவேற்றவள் "Hello  காவ்யா .. come on in..You know what.. you look soo pretty" என்று அவளை கைகளை பிடித்து உள்ளே அழைத்துச்சென்றாள். நட்போடு சிரித்துக்கொண்ட ரகுவை பார்த்ததும் காவ்யாவுக்கு அரவிந்தன்  "ரகு எனக்கு அண்ணன் மாதிரி"  என்று சொல்வது  நினைவுக்கு வந்ததும் "அத்தான் சொல்வது சரிதான்" என்று எண்ணிக்கொண்டு சிரித்தவாறே உள்ளே சென்றாள்.

ஏற்கனவே வந்திருந்த மற்ற நண்பர்களையும் அவர்களது மனைவிகளையும் காவ்யாவுக்கு ஷோபா அறிமுகப்படுத்த, காவ்யாவின் கண்களோ அவளையுமறியாமல் மோனாவை தேடின.

ரகுவின் மூன்று வயது குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளறையில் இருந்து வந்த அந்த நவ நாகரிகமான பெண்ணை கண்டதும் மோனவாகத்தான் இருக்கவேண்டுமென்று அவள் நினைத்த அதேநேரத்தில் ஷோபாவும் "Kavya, this is Mona.. and Mona this is Aravind’s wife Kavya "என்று தயக்கத்தோடு சொல்லி முடித்தாள்.

ஒரு வினாடி காவ்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவளுக்கு  அரவிந்தன் ஏன் தன்னை மறுத்தான் என்று புரிந்தது. மாமன் மகள் என்றதும் எதோ படிக்காத கிராமத்து பெண்ணாக இருப்பாள் என்று நினத்தவளுக்கு வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையைப்போல, அவனுக்கு இணையான உயரத்துடனும் படிப்பும் பண்பும் தந்த கூடுதல் அழகுடனும் உயர் குடும்பத்தில் வளர்ந்த மிடுக்குடனும் அவனருகே நின்றவளை மற்ற விருந்தினர்கள்போல தானும் மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்.

Saturday, November 7, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 6

 

எதற்காக மோனா அத்தான் எண்ணுக்கு அழைக்கிறாள் என்ற சஞ்சலத்துடன் அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று காவ்யா யோசித்துக்கொண்டிருக்கும் போதே அழைப்பு நின்றுவிட்டிருந்தது. 

எத்தனை அழகாய் எத்தனை உண்மையாய் தன் வாழ்க்கையில் சந்தித்த பெண்களை பற்றியும், தன்மீதுள்ள உண்மையான காதலைப்பற்றியும் தாயிடம் அனைத்தையும் சொல்லும் குழந்தைபோல சொன்னவரை பற்றி இன்னமும் கவலைகொள்ளும் தன் மனதை கண்டித்துவிட்டு, அத்தான் வந்ததும் மோனா அழைத்ததை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தவளாக தன் போனை எடுத்து வாட்ஸாப்ப்க்கு சென்று மெசேஜ்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது தோழிகளிடமிருந்தும் மித்ராவிடமிருந்தும் வந்தவற்றை பார்த்துக்கொண்டே வந்தவள், பவித்ராவிடமிருந்து வந்திருந்த மெசேஜை பார்த்ததும் சந்தோஷத்தில் பூரித்துப்போனாள்.

"Hai காவ்யா..I hope you and Arvind are doing good.. ஒரு சந்தோஷமான நியூஸ்..I am pregnant.. in 6th week now.. இன்னைக்குத்தான் டாக்டர் confirm  பண்ணாங்க .. உனக்குத்தான் மொதல்ல சொல்லணும்ன்னு நெனச்சேன்.. அம்மாகிட்ட கூட இனிமேதான் சொல்லப்போறேன்.. பிரீயா இருக்கிறப்போ கால் பண்ணு” என்ற அவளின் மெசேஜை மனதில் நெகிழ்ச்சியோடும்  முகத்தில் புன்னகையோடும் பார்த்துக்கொண்டிருந்தவளை,

 "wow!! என் ஏன்ஜெல் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கே " என்றவாறே கிச்சனுக்குள்  நுழைந்த அரவிந்த், அதே வேகத்திலேயே அவளை இழுத்து அணைக்க, அவனது அணைப்பும், அவளுக்கு மிகவும் பிடித்த அவனது perfume வாசனையும் அவளை மயக்க,  சுதாரித்துக்கொண்டு தன்னிலைக்கு வந்தவள்,

"அத்தான்.. குளிச்சிட்டு இனிமே நேரா சாமி கும்பிட்டுதான் மத்த வேலையெல்லாம் .. வாங்க" என்று அவனை பூஜை அறைக்கு இழுத்து சென்றாள்.

பூனைக்குட்டியாய் அவளோடு சென்றவன் அவளை ரசித்துக்கொண்டே  நின்றிருக்க, விளக்கின் திரியை தூண்டி விட்டபடியே "ஹ்ம்.. சாமி கும்பிடுங்க அத்தான்" என்றதும்   சிரித்தபடியே    கையெடுத்து கடவுளை வணங்கிவிட்டு விளக்கை தொட்டு கும்பிட்டான்.

அவனை ஆசையாய் பார்த்தவாறே "அத்தான்.. நீங்க வரப்போ நான் ஏன் சிரிச்சிட்டு இருந்தேன் தெரியுமா? பவித்ரா இல்ல .. அவங்க மெசேஜ் பண்ணியிருந்தாங்க..அவங்க இப்போ pregnent ஆ இருக்காங்களாம்.. இன்னைக்குத்தான் confirm ஆச்சாம்" கண்களில்  மகிழ்ச்சியோடு நாணமும் கலந்து சொன்னவளை அன்பொழுக பார்த்தவன், அடுத்தவரின் சந்தோஷத்திலும் எத்தனை சந்தோசப்படுகிறாள் என்று அவளை நினைத்து  பெருமை பட்டவாறே “wow really great newsடா.. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. பிரேம் வீட்ல எல்லாருக்கும் பயங்கர ஹாப்பியா இருக்கும்ல.. நம்ம வீட்ல கூட எல்லாரும் ரொம்ப சந்தோசபடுவாங்க.. "  என்றான்.

"ஆமா அத்தான்.. பவித்ரா இன்னொன்னும் சொன்னாங்க.. இந்த ஹாப்பி நியூஸ்ச மொதல்ல நம்மகிட்டேதான் சொல்லணும்னு நினைச்சாங்களாம்.. பெரியம்மாகிட்ட கூட இனிமேதான் சொல்ல போறாங்களாம்.. பவித்ரா நெறய change ஆகிட்டாங்க.. இல்ல அத்தான் " என்றாள்.

"ஹ்ம்ம் அவளுக்கு உன்ன ரொம்ப பிடிச்சி போய்டிச்சி காவ்யா.. அவ நல்லா இருக்கணும்னு நீ ஆசைப்பட்ட இல்ல? அத நல்லா புரிஞ்சிகிட்டா..  நானும் அப்பாவும் கூட அத்தையும் பவித்ராவும் இப்டித்தான்னு இரிடேட் ஆகிட்டோம்.. ஆனா அம்மாவும் நீயும் கிரேட்.. அவங்க என்ன பண்ணாலும் பொறுத்துகிட்டு அவங்களுக்கு நல்லதே பண்ணீங்கல்ல..so she was moved.. அதைவிட ஆச்சர்யம் அத்தை மாறினதுதான்..” என்றான் மனநிறைவோடு.

"ஹ்ம்ம்.. சரி அத்தான் வாங்க சாப்பிடலாம்.. சாப்பிட்டுட்டு  பவித்ராவுக்கு அப்பறம் அத்தை மாமாவுக்கும் கால் பண்ணலாம். நைட் அம்மா அப்பாட்ட பேசலாம்.. அப்பா ஏர்லி மர்னிங் தான் வீட்ல இருப்பாரு.." என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஹ்ம்ம் கொட்டியவாறே  ஏதோ யோசனையில் இருந்தான் அரவிந்த். "என்ன அத்தான்.. என்ன யோசிக்கிறீங்க?" என்று தட்டில் சர்க்கரைப்பொங்கலை பரிமாறியவளை காதலுடன் பார்த்தவன்  "காவ்யா, பவித்ரா conceive ஆனதுக்கே நாம இவ்ளோ சந்தோசப்படறோமே.. நமக்குன்னு வந்தா எப்படி இருக்கும்..?" என்று கண்களில் சந்தோசம் மின்ன கேட்டவனை கண்கள் சட்டென்று கலங்க பார்த்தவள் "அந்த நாளுக்காக நா காத்திருக்கேன் அத்தான்" என்றாள்.

"சாரி டா என்னால தான் நமக்கு இன்னும் அந்த சந்தோசம் கிடைக்கல இல்ல.. இப்போகூட நீ சொன்னா நம்ம முடிவை மாத்திக்கலாம்டா " என்றான் காதலொழுக.

அரவிந்த் திருமணமான அன்று இரவே அவளிடம் குழந்தை பற்றி பேச்சை எடுத்திருந்தான். "காவ்யா, நாம ரெண்டு பேரும் எத்தனை ஆசையோட எத்தனை காதலோடு நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சிருக்கோம்.. கொஞ்ச வருசத்துக்கு லைப் எ என்ஜாய் பண்ணுவோம்.. நெறய ட்ராவல் பண்ணுவோம்.. திகட்ட திகட்ட லவ் பண்ணுவோம்.. அதுக்கப்பறம் குழந்தை பெத்துக்குவோம்.. நம்ம குழந்தைக்கு நம்ம நல்ல பேரெண்ட்ஸா இருக்கணும்..  அதுக்கு நாம பிரிப்பர் ஆகணும்.. அதுவுமில்லாம நீ சின்ன பொண்ணு காவ்யா.. இப்பவே உனக்கு அவ்ளோ பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி வேணாம்.. என்னதான் நான் கூட இருந்தாலும் அந்த வலியும் வேதனையும் நீதானே படணும்.. அதை நெனச்சாலே எனக்கு கஷ்டமா இருக்கு " என்று நிறுத்தியவன் சட்டென்று "இதெல்லாம் நான் நினைக்கறது.. பட் உனக்கு பிடிக்கலைன்னா இந்த பிளானிங் எல்லாம் வேணாம்" என்றான்.

கணவனின் அன்பில் உருகியவள் அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே, "அத்தான் நீங்க எது சொன்னாலும் அது நம்ம நல்லதுக்குதான் இருக்கும்.. என்னைவிட உங்களுக்குதான் குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும்.. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்பவே பெத்துக்குவோம். எனக்கு குழந்தையை விட நீங்க தான் அத்தான் முக்கியம்" என்றவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.

அந்த நாளை நினைவு கூர்ந்தவள் "அத்தான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.. நம்ம அன்புக்கு அடையாளமா வரபோற அந்த குட்டி ஜீவனுக்காக நான் காத்திட்டு இருக்கேன்.. ஆனா அது நீங்க சொன்ன மாதிரியே கொஞ்ச வருஷம் கழிச்சி வரட்டும்.. இப்போதைக்கு உங்கள கவனிச்சிக்கறதும் உங்கள என் உயிருக்குயிரா நேசிக்கறது மட்டும் தான் செய்யப்போறேன்.. அதுக்கு யாரும் போட்டிக்கு வரக்கூடாது.. நம்ம குழந்தைகூட " என்று கண்களை சிமிட்டி அழகாய் சிரித்தாள் காவ்யா.

தானும் சிரித்தபடியே, சக்கரை பொங்கலை அவளுக்கும் ஊட்டிவிட்டுக்கொண்டே தானும் சாப்பிட்டான் அரவிந்தன் மனம் முழுதும் சந்தோசமாய்.

"எப்படி இருக்கு அத்தான்? இன்னிக்குத்தான் first time பண்ணிருக்கேன்" என்றாள் கண்கள் படபடக்க.

"ரொம்ப நல்லா இருக்கு காவ்யா.. actually அம்மா பண்றதைவிட நல்லா இருக்கு.. " என்று சிரித்தவன் "அம்மா பாவம் இல்ல காவ்யா.. உன்ன கஷ்டப்படுத்தினமாதிரி அம்மாவையும் ரொம்ப படுத்திட்டேன்.. பாவம் எப்போ போன்ல பேசுனாலும் கல்யாணம் பத்திதான் பேசுவாங்க.. நான் அவங்களுக்கு சரியான பதிலே சொல்ல மாட்டேன்.. கண்டிப்பா நான் வேற யாரையோ லவ் பண்ணறேன்னு நெனச்சிருப்பாங்க.. அப்படி ஏதாவது இருந்திருந்தா அவங்க ஆசையை விட, உன்ன பத்தி நல்லா புரிஞ்சிதால , நீ கஷ்டப்படுவீயேன்னுதான் பயந்திருப்பாங்க.. உன்மேல அவங்களுக்கு இருக்கற பாசம் இருக்கே.. அப்பா.. உன்கிட்ட இருந்து போன் வந்தாலே அவ்ளோ சந்தோசப்படுவாங்க" என்றான்.

"ஹ்ம்ம் ஆமா அத்தான்.. ஒவ்வொரு டைமும் வீட்டுக்கு வரப்போ என்னென்ன வாங்கிட்டு வருவாங்க தெரியுமா.. ஏதாவது புதுசா டிவில பாத்தாங்கன்னா ஒடனே எனக்கும் மித்ராவுக்கும் வாங்கிட்டு வந்துருவாங்க.. புதுசா குர்தி வந்தாலும் சரி புதுசா சாரி மாடல் வந்தாலும் சரி .. அதுதவிர பர்த்டேக்கு நகை, புது போன் இப்படி ஏதாவது..அம்மா கூட சொல்லுவாங்க .. ஏன் இப்படி செலவு பண்றேன்னு.. இந்த மித்ரா இல்ல ஏதாவது வேணும்னா சித்திகிட்ட கேப்பா அவங்க நோ சொல்லிட்டா நேரா அத்தைக்கு கால் பண்ணி கேட்டுருவா.. மறுநாளே வாங்கிட்டு வந்துருவாங்க.. அண்ணன்ங்க குடும்பம்னா உயிர் அவங்களுக்கு" என்று காவ்யாவும் அத்தையை மெச்சிக்கொண்டாள்.

குடும்பத்தினரை பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், மறுநாள் அரவிந்தன் வேலையில் சேரவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, மதியத்திற்கு மேல் ஷாப்பிங்கும் மாலையில் அருகிலுள்ள லேக்குக்கும் செல்லலாம் என்று முடிவு செய்தனர்.

லேப்டாப்பை ஆன் செய்து பவித்ராவுக்கு வீடியோ கால் செய்தவர்கள் அவளிடமும் அவள் குடும்பத்தாரிடமும் பேசினர். பிரேம் முகமெல்லாம் சிரிப்பாக இவர்களிடம் "உங்க ரெண்டு பேருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்..உங்களை பவி மீட் பண்ணலன்னா எங்க லைப் வேற மாதிரி இருந்திருக்கும்" என்றான் உணர்ச்சிபூர்வமாய். "அண்ணா.. பழசெல்லாம் விடுங்க.. பவித்ராவை நல்லா பாத்துக்கோங்க.. நாங்க பிரே பண்ணிக்கறோம்.. உங்க ஜூனியர்அ பார்க்க நாங்க வைட்டிங்" என்றாள் காவ்யா.

பவித்ரா "காவ்யா எங்களுக்கும் குட்டி காவ்யா இல்ல குட்டி அரவிந்த் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு.. நீங்களும் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க" என்று அவளை கலாய்க்க சிரித்துக்கொண்டாள் காவ்யா.

நால்வரும் கேலியும் கிண்டலுமாய் பேசிக்கொள்ள நேரம் போனதே தெரியவில்லை. ஒருவழியாக பேசிமுடித்தவர்கள் வசந்தாவையும் அழைத்து பேசினர். மகனையும் மருமகளையும் சேர்த்து பார்த்தவள் கண்கள் ஆனந்தத்தில் கலங்க, சுகுமாரன் மகனிடம் "இந்த தாய்குலத்துக்கு சோகம் வந்தாலும் அழுகைதான்.. சந்தோசம் வந்தாலும் அழுகைதான்பா " என்று கலாய்க்க கணவனை முறைத்தவள் "அது உங்களுக்கு புரியாதுங்க.. என் மகனையும் மருமகளையும் இப்படி பார்க்கறது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா.. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடிகூட இதெல்லாம் நடக்குமான்னு நமக்கு தெரியாது.. எல்லாம் நான் நினைச்ச படி நல்ல படியா முடிஞ்ச சந்தோஷத்துல நான் இருக்கேன்.. " என்றாள்.

அத்தையை பார்த்து பாசத்துடன் "அத்தை, உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நீங்க நினைச்சதெல்லாம் கண்டிப்பா நடக்கும்.. நான் உங்கள மாதிரியே அத்தானை நல்லபடியா கவனிச்சிக்குறேன்.. நீங்க நிம்மதியா மாமாவை பாத்துகிட்டு உங்க உடம்ப பாத்துகிட்டு சந்தோசமா இருங்க " என்றாள் கனிவாய்.

  "சரிடா.. நீ என்னைவிட அவனை நல்லா பாத்துக்குவ.. எனக்கு தெரியும்டா.. என் பயமெல்லாம் நீ தனியா அங்க கஷ்டபடுவியேன்னுதான்.. இங்க எல்லாத்துக்கும் வேலையாள் இருந்தாங்க.. உன்ன ராஜாத்தி மாதிரி வச்சிருப்போம்.. அங்க எல்லா வேலையும் நீங்க தான செய்யணும்" என்றாள்.

முகத்தில் பொய்யான கோபத்துடன் அரவிந்த் " அம்மா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. நாலு வருஷமா நானே சமைச்சி நானே தனியா கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்.. அப்போல்லாம் இந்தமாதிரி கவலைப்படாம இப்போ மருமகளுக்கு மட்டும் கவலைப்படுற" என்றான்.

"அது ஏன்னா நீ என் பையன்.. என் பையன் கஷ்டப்படலாம் .. ஆனா வள்ளியோட புள்ள கஷ்டப்படக்கூடாதுப்பா.. அவளுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன்.. அவ குழந்தையை நாங்கெல்லாம் சேர்ந்து நல்லபடியா வளப்போம்னு" என்று பழைய நினைவுகளில் மூழ்கியபடியே வசந்தா சொல்ல, காவ்யாவின் கண்கள் எந்நேரமும் கலங்கலாம் என்று நினைத்தவன் அவள் தலையை பக்கவாட்டில் தன்னோடு சாய்த்துக்கொண்டு அம்மாவிடம் "அம்மா.. கவலைப்படாத.. நீ கொடுத்த வாக்கு எப்பவும் பொய்யாகாது.. நான் இவளை நல்லபடியா பாத்துப்பேன்.. சரியா ? நீ உடம்ப பாத்துக்கோ.. கொஞ்சநாள் தாத்தா வீட்ல போய் இரும்மா.. " என்று சொல்லி இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.

சட்டென்று நினைவு வந்தவளாக "சாரி அத்தான்.. சொல்லவே மறந்துட்டேன்..நீங்க குளிச்சிட்டு இருந்தப்ப மோனாகிட்ட இருந்து கால் வந்தது.. நீங்க வந்ததும் சொல்லணும்னு நெனச்சேன்.. பட் பவித்ரா மெசேஜை பார்த்ததும் அப்படியே மறந்துட்டேன்" என்று அவனது போனை கொண்டு வந்து கொடுத்தாள்.

மோனாவைப்பற்றி எல்லாம் தெரிந்தும் அவளது போன் கால் என்று தெரிந்தும் தன்னிடம் வந்து சொல்கிறாள் என்றால் தன் மீது எத்தனை நம்பிக்கை அவளுக்கு என்று அவளை நினைத்து பிரமித்தவனாய் "மோனாவோட பழைய நம்பர் தான் என்கிட்ட இருந்திச்சி ..அதை டெலிட் பண்ணிட்டேனா இல்ல பண்ணலயாண்ணே எனக்கு ஞாபகம் இல்ல.. இப்போ எதுக்கு கால் பண்ணறான்னு தெரியலையே.. விடு பாத்துப்போம்.." என்றவனை "இல்ல அத்தான்.. நான் உங்களுக்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க.. ப்ளீஸ் கால் பண்ணி என்னன்னு கேளுங்க.. அவங்கள எதுக்காகவும் அவாய்ட் பண்ணாதீங்க.. ஒரு கலீக்குக்கு என்ன மரியாதை தரணுமோ அதை எப்பவும் கொடுங்க.. நார்மலா இருந்தாதான் அவங்களும் நார்மலா பீல் பண்ணுவாங்க" என்று தயக்கத்துடன் சொன்னவளை மூக்கை பிடித்து கொஞ்சியவாறே "ஓகே மேடம்.. கால் பண்றேன்" என்றுவிட்டு அதே நம்பரை கால் செய்தான்.

Tuesday, November 3, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 5

            ழகாய் விடிந்தது ஞாயிற்றுக்கிழமை. எங்கிருந்தோ வந்த சிறு பறவையின் இனிய கீச் கீச்சென்ற சத்தம் கேட்டு கண்விழித்தாள் காவ்யா. எதிரிலுள்ள சுவரில் மாட்டியிருந்த அழகிய கடிகாரம் காலை மணி ஏழு எனக்காட்டியது. 

            நாலைந்து நாட்களுக்குப்பின் இன்றுதான் அவளுக்கு அமெரிக்கா நேரம் செட்டானது போல தோன்றியது. தன்னை சுற்றி வளைத்திருந்த அரவிந்தனின் கைகளை  மெல்லிய நாணத்தோடு மெதுவாக விடுவித்துவிட்டு, குழந்தையாய் அசந்து தூங்கிக் கொண்டிருப்பவனின் தலையை காதலோடு வருடி, நெற்றியில் மென்முத்தமிட்டாள். 

            படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவாறே கழுத்தில் தொங்கிய, இன்னமும் புது முறுக்கு கலையாத தங்க சங்கிலியில் கோர்த்த தாலியை  இரு கைகாளாலும் எடுத்து பார்த்து கொண்டவள் உடலில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தாள். ஒரு பெண்ணிற்கு  இந்த தாலி  எத்தனை விதமான உணர்வுகளை தருகிறது. எத்தனை கௌரவத்தை அள்ளி தருகிறது.  

            சமீப காலங்களில் தாலி பெண்ணடிமையின் சின்னமாக சிலரால் கருதப்பட்டாலும் கணவனை நேசிக்கும் பெண்கள் இன்னமும் தாலியையும் நேசிக்கத்தான் செய்கிறார்கள்.. அதிலும் என் அத்தான்.. என் அன்பு அத்தானுக்காக தாலி என்ன பெரிய மலையை சுமக்க கூட நான் தயார்.. என்று நினைத்துக்கொண்டவள் அவளது தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.

            திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் அமெரிக்காவுக்கு கிளம்ப வேண்டி இருந்ததாலும்  திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை மாதங்களில் தான் தாலி பிரித்து கோர்க்கவேண்டுமாதலாலும், தை மாதம் திருமணம் முடிந்த கையோடு அதே மாதத்தில்  தாலி பிரித்து கோர்க்கும் விஷேசத்தையும் விமரிசையாக நடத்தினர் பெரியவர்கள். 

            காவ்யாவின் வீட்டில் வைத்து முக்கியமான உறவினர்கள் மற்றும் ஊரிலுள்ள சுமங்கலிகளை அழைத்து திருப்தியாக செய்தனர். திருமணம் முடிந்து பதினைந்து நாட்களிலேயே  விஷேசம் வந்ததால், புதுபெண்ணுக்கேயுரிய      நாணத்தோடு காவ்யாவும் முகமெல்லாம் சிரிப்பாக அரவிந்த்தும் தம்பதியராக மணப்பாயில் கிழக்கு முகம் பார்த்து  அமர்ந்திருந்தனர். 

            திருமணத்திற்கு எடுத்து பட்டு புடவை மற்றும் வேஷ்டியையே உடுத்தவேண்டும் என்ற சம்பிரதாயத்தின்படி, அவர்கள் அதே உடையில் இருந்தாலும் சிவகாமி பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும்  புதுஉடைகள் எடுத்து தாம்பாளத்தில் சீர் வரிசையோடு வைத்திருந்தாள். 

            

            ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்த குடும்பத்தாரை நினைத்து மனம் நெகிழ்ந்து கண் கலங்கும் போதெல்லாம் அரவிந்த் தான் ஆறுதல் சொல்வான். 

            "காவ்யா.. அவங்க பொண்ணுக்கு அவங்க செய்றாங்க.. நீதான் இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்க.. அவங்க எல்லாம் எப்பவும் போல இருக்காங்க.. நீ எப்பவும் இந்த வீட்டு இளவரசி தான்.. அதுவில்லாம இப்போ என் பொண்டாட்டி.. உனக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறாங்க.. அத்தை மாமா முகத்துல எவ்ளோ சந்தோசம் பாத்தியா? நீ இப்படி யோசிக்கறன்னு  தெரிஞ்சாலே வருத்தப்படுவாங்க. சந்தோஷமா இருடா.. " என்று அவ்வப்போது கிசுகிசுப்பாக சொல்லி அவள் மனதை மாற்றுவான்.

            எத்தகைய சூழ்நிலையிலும் தன் மனதை படித்துவிடுவதோடு அதற்கு மருந்தாகவும் இருக்கும் தன் கணவனை நெஞ்சில் சுமப்பவளுக்கு அவளது தாலி ஒரு புனிதமான உணர்வைத்தர கண்களில்  ஒற்றிக்கொண்டவள், ஒரு  நிமிடம் கண்கள் மூடி அரவிந்த்காகவும் குடும்பத்தில் அனைவருக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் 

            இந்த பழக்கம் அவளுக்கு அமிர்தம் அம்மாளிடம் இருந்து வந்திருந்தது. எப்போதும் அவர் எழும்போது தாலியை கண்களில் ஒற்றிக்கொள்வதையும் ஒருநிமிடம் கண்மூடி வேண்டுவதையும் பார்த்து சிறுவயதிலேயே ஒருநாள் கேட்டாள். "ஏன் பாட்டி, தூங்கி எழுந்ததும் தினமும் இந்த மாதிரி பண்ற?"  என்று கேட்டவளை கன்னத்தை தட்டி "காலையில எழுந்ததும் நம்ம மனசு இந்த உலகத்துல இருக்கற கெட்ட ஷக்திகளோட ஆதிக்கம் இல்லாம பரிசுத்தமா இருக்கும்.. அந்த நேரத்துல நம்ம புருஷன் நல்லபடியா இருக்கணும்னு  நாம மனசார வேண்டிக்கிட்டோம்னா அவங்க நூறு வயசுக்கு நல்ல ஆரோக்கியதோட சந்தோசமா இருப்பாங்க.. வீட்டு ஆம்பள சந்தோசமா இருந்தா அந்த வீடே சந்தோசமா இருக்கும்.. நான் இதனை வருஷமா உங்க தாத்தாவுக்காக எழுந்ததும் வேண்டிக்குவேன்.. அதான் உங்க தாத்தா ஜம்முன்னு ராஜா மாதிரி இருக்காரு" என்று சிரித்தவாறு சொன்னது அவள் மனதில் ஆழ பதிந்திருந்தது. 

            கிட்டத்தட்ட மறுநாளிலிருந்தே அரவிந்தனுக்காக காலையில் எழுந்ததும் வேண்டி கொள்ள தொடங்கியிருந்தாள்.

            திருமணம் முடிந்த மறுநாள் அவள் தூங்கி எழுந்ததும் முதன்முதலில் தாலியை கண்களில் ஒற்றிக்கொண்டு அவள் வணங்கியதும் அவளை பார்த்து சிரித்த அரவிந்த் "மேடம் நீங்க ஒரு ME கிராஜுவேட்.. ஆனாலும் கல்யாணம் ஆகிடிச்சின்னா எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இல்ல ?" என்று கலாய்த்தான். வெட்கம் முகத்தில் படர "இது பாட்டி என் சின்ன வயசுல சொன்னது அத்தான்.. அப்போலேர்ந்து நான் காலையில எழுந்ததும் உங்களுக்காக பிரே பண்ணிப்பேன்.. இப்போ கல்யாணம் ஆனதும் தாலிய தொட்டு கும்பிடுறேன்.. நீங்க நூறு வயசுக்கு ஹெல்த்தியா ஹாப்பியா இருக்கணும்.. அதுதான் என் ஆசை"  என்றவளை காதல் பெருக்கெடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

          சுகமான நினைவுகளில் மூழ்கியவள், மெலிதாய் சிரித்துக்கொண்டு கட்டிலைவிட்டு எழுந்தாள். கடகடவென்று குளித்து முடித்து, அவனுக்கு பிடித்த வெளிர் நீலநிற குர்தியில், ஈரக்கூந்தலை தளர்வாக கிளிப் செய்து, நெற்றியில் சந்தனகீற்றோடு தேவதையாய் மின்னினாள். 

            பூஜையறையில் சாமி விளக்கேற்றி, அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டவள்,  இன்னும் அரவிந்த் தூங்கிக்கொண்டிருக்க, மளமளவென்று அவனுக்கு பிடித்த இடியாப்பமும் தொட்டுக்கொள்ள காய்கறிகள் போட்ட பாயாவும் செய்து ஹாட்பாக்ஸில் வைத்தாள். 

            எதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்தவள் வசந்தாவை போனில் அழைத்தாள். மருமகளின் எண்ணை பார்த்ததும் முகமெல்லாம் பரவசமாய் "காவ்யா கண்ணு... எழுந்திட்டயாடா..எப்படிடா இருக்கீங்க" என்றாள். வந்ததிலிருந்து தினமும் ஒரு தடவையாவது  இருவர் வீட்டிற்கும் பேசி விடுவார்கள்.

            அத்தையின் முகத்தை வீடியோ காலில் பார்த்ததும் அவளது சிரிப்பு தன்னையும் தொற்றிக்கொள்ள "நல்லா இருக்கோம் அத்தை.. நான் எழுந்து டிபன் பண்ணிட்டு இருக்கேன்.. அத்தான் இன்னும் தூங்கறாரு.. நல்லா தூங்கட்டும்ன்னு நானும் எழுப்பலை.. எதாவது ஸ்வீட் பண்ணலாம்னு இருக்கேன்.. அத்தானுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் ஏதாவது சொல்லுங்க அத்தை" என்று மருமகள் கேட்டதும் சந்தோஷத்தில் மனம் நிறைய "அவனுக்கு சர்க்கரை பொங்கல்ன்னா பிடிக்கும்டா.  ஆனா நீ ஏன் கஷ்டப்படற.. இப்போதான் போய்  கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கீங்க.. மெதுவா பண்ணலாம்டா.. நான் சொன்னேன்னு சொன்னா என்னை திட்டினாலும் திட்டுவான் " என்றாள் சிரித்துக்கொண்டே.

 

            "அதெல்லாம் ஒண்ணும் கஷ்டம் இல்ல அத்தை.. அம்மா குக்கர்ல எப்படி பண்றதுன்னு சொல்லி கொடுத்திருக்காங்க..அப்பறம் எல்லா சாமானும் இருக்கு.. நான் அதையே பண்ணிடுறேன்" என்றவளிடம் "சரிடா.. பார்த்து பத்திரமா பண்ணு.. அடுப்படி மட்டும் பழக பழகத்தான் வரும்.. கவனமா பண்ணு.. அரவிந்த ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கோ.. " என்ற அத்தையின் அன்பில் நெகிழ்ந்து  "பரவாயில்ல அத்தை.. அத்தான் பாவம்.. நாளைலேர்ந்து office போகணும் .. இந்த project ரொம்ப கஷ்டமானது வேற .. நெறய வேலை இருக்கும் போல.. " என்று வருத்தத்துடன் சொன்ன மருமகளை நினைத்து பெருமை பட்டுகொண்டாள் வசந்தா. என் மருமகளுக்குத்தான் என் மகன் மீது எத்தனை அக்கறை.. இந்த காதலும் அக்கறையும்தானே என் மகனுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. கல்யாணம் முடிந்ததும் என் மகன் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்.. பெற்றவளுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்.. எப்படியோ நான் நினைத்தபடி இவர்கள் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.. கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.  

          பிரஷர் குக்கரின் விசில் சத்தத்தில் எழுந்தவன் கிச்சனில் களேபரமாக சமையல் நடந்து கொண்டிருப்பதை வீடு முழுதும் வீசிய நெய்யின் நறுமணத்திலும் சிவகாமி அத்தை செய்யும் அதே குருமாவின் மசாலா வாசத்திலும் அறிந்தவன் சிரித்தவாறே கிச்சனுக்கு சென்றான். 

            விசில் சத்தம் கேட்டு அத்தான் விழித்துக்கொண்டு விடுவாரோ என்று குக்கரின் அருகில் நின்று படபடப்போடு விசில் நிற்கும் வரை டென்ஷனோடு நின்றிருந்தவளை மெதுவாய் நடந்து பின்பக்கமாக சென்று அணைத்துக்கொண்டவன் "குட் மார்னிங்… வாசம் மூக்கை தொளைக்குது.. தனியா ஏன்டா இப்படி கஷ்டப்படற.. என்ன எழுப்ப வேண்டியதுதானே" என்றவனின் சூடான மூச்சுக்காற்று காதோரம்பட்டு அவளை கிறங்கடிக்க சுதாரித்து கொண்டு "அத்தான்.. Please போய் குளிச்சிட்டு   வாங்க .. உங்களுக்கு ஒரு surprise.. உங்களுக்கு பிடிச்ச ஒரு ஸ்வீட் பண்ணிட்டு இருக்கேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. சீக்கிரம்.. " என்று அவனை பாத்ரூமிற்கு தள்ளிக்கொண்டு போனாள்.

            சிரித்தவாறே பாத்ரூமிற்கு சென்று அவன் கதவை சாத்திக்கொள்ள , விட்ட   இடத்திலிருந்து பொங்கலை தொடர்ந்தாள். அவன் மீதுள்ள காதலை பொங்கலில்  நெய்யிலும் முந்திரியிலும் காட்டியவள் அனைத்தையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு அவனுக்காக காத்திருக்கையில் அரவிந்தனின் போன் அடித்தது. எடுத்துப்பார்த்தவள் அது மோனாவிடமிருந்து என்பதை அறிந்ததும் அவளையுமறியாமல் அவள்  மனதின் ஓரத்தில் சிறு அச்சம் எட்டிப்பார்த்தது.

 


Thursday, October 29, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 4

 

விவேக் வீட்டில் சாப்பிட்ட திருப்தியான சாப்பாட்டிலும், அரவிந்தனின் அன்பான நம்பிக்கை தந்த வார்த்தைகளிலும், காலையிலிருந்து வீட்டை ஒழுங்குபடுத்திய களைப்பிலும் காவ்யா படுத்ததும் உறங்கிப்போனாள்.

இன்னும் தூக்கம் வராமல், அவள் தலையை வருடிக்கொடுத்தவாறே  மங்கலான நைட் லாம்பின் வெளிச்சத்திலும் அழகாய் தெரிந்த அவள் முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அரவிந்த், அவள் பேசிய பேச்சையும் அவளது அழுகையையும் நினைத்து சிரித்துக்கொண்டான்.

இந்த பெண்களுக்கு மட்டும் பொசசிவ்நெஸ் எங்கிருந்ததுதான் வருகிறதோ.. அதுவும் இவளுக்கு கொஞ்சம் அதிகம் தான் என்று எண்ணியவன் காதல் மிகுதியில் சற்றே அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட சட்டென்று விழித்துக்கொண்டவள்   அவனது முத்தத்தை உணர்ந்து "என்ன அத்தான்.. தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க " என்றாள் வெட்கசிரிப்போடு.

"ஹ்ம்ம்..  என் அழகு தேவதையை ரசிச்சிட்டு இருக்கேன்.." என்றவன் "காவ்யா.. தூங்கறப்போகூட நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?" என்றான் கிசுகிசுப்பாய்..

"அப்படியா.. நான் அவ்ளோ அழகா.. உங்களை சைட் அடிச்சாங்கல்ல அவங்க எல்லாரையும் விட நான் அழகா?" என்று தலையை சாய்த்து அழகாய் அவள் கேட்க,  சிரித்தவாறே அதை ரசித்தவன்  "ஆரம்பிச்சுட்டாயா.. அவங்க என்னை சைட் அடிச்சாலும் நான் இந்த அழகான ராட்சஷியத்தானே சைட் அடிச்சேன்.. சோ எனக்கு அவங்க அழகெல்லாம் கண்ணுக்கு தெரியலையே " என்றான் அவள் மூக்கை பிடித்து கொஞ்சிக்கொண்டே.

"அத்தான்.. ப்ளீஸ் சொல்லுங்க.. உங்க கலீக் மோனா என்னைவிட அழகா இருப்பாங்களா?" என்றாள் கெஞ்சலாக.

மோனாவை பற்றி கேட்டதும் முகத்தில் சிரிப்பு தொலைந்து போக ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து உட்கார்ந்தான். அவனது முகமாற்றத்தை கண்டவள் சற்றே கவலையுடன் தானும் எழுந்து உட்கார்ந்தவாறே "சாரி அத்தான் .. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. நான் இனிமே கேட்கமாட்டேன்" என்றாள்.

அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன்  "இல்ல காவ்யா.. உன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் நெனச்சதுதான் தப்பு.. நீ என்னை அளவுக்கு அதிகமா நேசிக்கறதுனால எதுக்கு தேவை இல்லாம இங்க நடந்ததை சொல்லி உன்னை கஷ்டப்படுத்தணும்னு நெனச்சேன்.. but that is not right thing .. நீ என் காதலி மட்டும் இல்ல .. என் மனைவி.. என்னோட பாஸ்ட் எல்லாத்தையும் நான் உன்கிட்ட கண்டிப்பா ஷேர் பண்ணியே ஆகணும்.. இல்லனா இன்னிக்கு கயல் அக்கா .. நாளைக்கு வேற யாராவதுன்னு உனக்கு யார் மூலமாவோ விஷயம் தெரியறப்போ அது உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தும் .. " என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

என்ன சொல்லபோகிறானோ என்ற பயம் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய அதை கவனித்தவன் "காவ்யா நீ பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல.. சரியா? ஒண்ணு மட்டும் நீ நல்லா தெரிஞ்சிக்கோ.. எந்த நேரத்திலும் நான் உன்  அத்தானாதான் இருந்திருக்கேன்.. உன் இடத்துல நான் எந்த பொண்ணையும் வச்சதில்ல.. இது எங்கம்மா மேல சத்தியம் " என்றதும் "அத்தான்.. நான் உங்கள நம்புறேன்.. ஏன் சத்தியமெல்லாம் பண்றீங்க? இப்பகூட நீங்க இதெல்லாம் எனக்கு தேவையில்லன்னு நினைசீங்கன்னா சொல்ல வேண்டாம்.. எனக்கு எப்பவும் நீங்க நல்லதுதான்  பண்ணுவீங்க  அத்தான் .. எனக்கு தெரியும். கயல் அக்கா சொன்னதும் எதோ எமோஷனல் ஆகி உங்ககிட்ட கேட்டுட்டேன்.. அது பெரிய தப்பு அத்தான்.. உங்கமேல நான் எவ்ளோ நம்பிக்கையும் மரியாதையும் வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் ஒரே நிமிசத்துல கெடுத்துட்டேன்.. "என்றவாறே மெலிதாய் தலையில் அடித்துக்கொண்டாள்.

"ஹே காவ்யா.. நீ கேட்டதுதான் சரி.. உனக்கும் எனக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது.. உனக்கு என்கிட்ட என்ன கேட்கணும்னு தோணுதோ அத கேட்கலாம். கயல் அக்காக்கு நம்மள பத்தி தெரியாது.. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் நம்மள பத்தி தெரியும்.. நீ எனக்கு கிடைக்க மாட்டியான்னு பலநாள் தூங்காம தவிச்சவன் நான்.. நம்ம கல்யாணம் ஆனதும் எதோ கிடைக்காத பொக்கிஷம் கிடைச்ச மாதிரி நான் அவ்ளோ சந்தோசமா இருக்கேன்.. அது உனக்கும் தெரியும்.. நீ அழுததுகூட  நான் ஏன் மோனா பத்தி உன்கிட்ட     சொல்லலைன்னு தானே தவிர என்மேல சந்தேகப்பட்டு இல்ல .. அதுவும் எனக்கு தெரியும்" என்றவனின் தோளில் சாய்ந்தவள் " தேங்க்ஸ் அத்தான் என்னை சரியா புரிஞ்சிகிட்டத்துக்கு " என்றாள்.

வசதியாய் அவளை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு "ஓகே .. இப்போ உனக்கு தெரிய வேண்டிய சீக்ரெட்ஸ் எல்லாம் சொல்லிடுறேன். நான் சொன்ன மாதிரி சுமதி பத்தி மொதல்ல சொல்றேன்.. அவ வீடு எங்க பக்கத்து வீடுதானே.. எப்பல்லாம் நான் வீட்ல இருக்கேனா அப்போல்லாம் அம்மாட்ட பேச வரமாதிரி வருவா.. அம்மா பாக்காதப்போ என்னை பாத்து லுக் விடுவா.. நான் டெல்லில படிக்கறபோ ஒரு தடவை லீவ்க்கு வீட்டுக்கு வந்திருந்தேன்.. ஒருநாள் அவளைக்கூப்பிட்டு 'சுமதி, அண்ணனுக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்.. காவ்யாக்கு பர்த்டே வருது.. அவளுக்கு கிப்ட் வாங்கணும்.. நீ வந்து ஒரு மேக்கப் செட் செலக்ட் பண்ணி தரியா' ன்னு கேட்டேன். கடுப்பாகி அதுக்கப்பறம் வீட்டுப்பக்கமே வரமாட்டா.. அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணமும் ஆகிடிச்சி.." என்றதும் இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.

"ஹ்ம்ம் அப்பறம் " என்று ஆர்வமாய் கேட்டவளை "ஆர்வத்தை பாரு .." என்று செல்லமாய் தலையில் குட்டியவாறு "அப்பறம் டெல்லில ஒரு பஞ்சாபி பொண்ணு.. பேரு தீப்தி..நாங்க boys girls எல்லாம் கலந்து  ஒரு குரூப்பா friends ஆ இருந்தோம்.. திடீர்னு ஒருநாள் "உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. டேட் பண்ணலாமான்னு" கேட்டா..அவகிட்ட 'சாரி I am committed’ ன்னு  சொன்னேன்.. ரெண்டு நாள் dulla  இருந்தா.. அப்பறம் பத்து பதினைஞ்சி நாள்ல  வேற department பையனை கூட்டிட்டு வந்து this is my boy friend ன்னு சிரிச்சிட்டே சொன்னா.. எனக்கும் நிம்மதியா  இருந்திச்சி..” என்று நிறுத்தியவன் அதே நிம்மதியை அவளது முகத்திலும் கண்டான்.

"அதுக்கப்பறம் MS படிக்கிறப்போ சோபியான்னு ஒரு இத்தாலி பொண்ணு.. ரொம்ப இன்னொசென்ட்.. எனக்கு அவளை பாக்கறபோ உன்னோட இத்தாலி வெர்சன்னு தோணும்.. எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருப்பா.. எனக்கு அவளை பாத்தா எதோ குழந்தையை பாக்கற மாதிரி தான் தோணும்.. பாவம் டிசம்பர் ஹாலிடேய்ஸ்க்கு அவங்க ஊருக்கு போனவ ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டா.. ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. கொஞ்ச நாளைக்கப்பறம் அவ கிளோஸ் friend தான் சொன்னா கோர்ஸ் முடியறப்போ என்ன ப்ரொபோஸ்  பண்ண  போறதா சொல்லியிருக்காளாம் “ சற்றே சோகமாய் அவன் சொல்ல காவ்யாவின் கண்கள் கலங்கியிருந்தன.

"பாவம் இல்ல அத்தான் அந்த பொண்ணு.." என்று அவனை இறுக்கிக்கொண்டாள்.

"ஹ்ம்ம்.. அவ மேல எனக்கு லவ் இல்லேன்னாலும் அவ இறந்தது எனக்கு ரொம்ப ஷாக்கிங்ஆ இருந்திச்சி.." என்றவன் "சரி காவ்யா .. ரொம்ப லேட் ஆகுது.. தூங்கலாமா?" என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "அத்தான் மோனா பத்தி சொல்லவே இல்ல?" என்றாள் தயக்கத்துடன். அவளை பொறுத்தவரை மற்றவர்களை விட மோனா பற்றித்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பயம் இருந்தது.

ஆழ்ந்த பெருமூச்சுடன் "ஹ்ம்ம்.. இந்த மோனா மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல .. அவங்க எல்லாமே  சின்ன பொண்ணுங்க..  எனக்கு interest  இல்லன்னு தெரிஞ்சதும் விட்டுட்டாங்க..  ஆனா இந்த மோனா ரொம்ப வித்தியாசமானவ. மோனா வாசுதேவன். டெல்லில செட்டில் ஆன தமிழ் குடும்பம். சிவகாமி அத்தை வாங்குன சத்தியதால நான் ரொம்ப மனசு ஒடஞ்சி தான் US ல வந்து இறங்குனேன். அப்போ இந்த டீம் ஏற்கனவே இங்க இருந்திச்சி.. டீம்ல நான்தான் ரொம்ப ஜுனியர்.. ரகு கூட எனக்கு அப்போ ரொம்ப பழக்கம் இல்ல.. friends  யாரும்   இல்லாம உன்கிட்டயும் பேச முடியாம ஒர்க் லோடும்   ரொம்ப இருந்ததால ரொம்பவே  கஷ்டப்பட்டேன்.    இந்த மோனா ஒரு ஆறு மாசம் கழிச்சி  எங்க டெல்லி ஆபீஸ்ல இருந்து இங்க வந்திருந்தா.. ரகு சொன்னதால அவளுக்கு ஜாய்னிங் பார்மாலிட்டீஸ்ல எல்லாம் கூட இருந்து ஹெல்ப் பண்ணேன். பொதுவா எங்க போனாலும் பொண்ணுங்ககிட்ட நான் ரொம்ப பேசறதில்லை. எப்பவும் நீ என் மனசுல இருந்ததாலயும் அம்மாக்கும் நான் உன்னை கல்யாணம் பண்றதுதான் சந்தோஷம்னு  தெரிஞ்சதாலயும் யார்கிட்டயும் ரொம்ப பேசறதில்ல. ஆனா இவகிட்ட அடிக்கடி பேசறமாதிரி நிறெய சிச்சுவேஷன்ஸ் அமைஞ்சது.

அவளுக்கு என்னை பிடிக்க ஆரம்பிச்சதுன்னு நான் எப்போ பீல் பண்ணேனோ அப்பவே உன்னை பத்தி அவகிட்ட சொல்லிட்டு கொஞ்சம் விலக ஆரம்பிச்சுட்டேன்.. ஆனா அவளால அத தாங்க முடியல.. கொஞ்ச நாள் அமைதியா இருந்தவ திடீர்னு ரகு கிட்ட  வந்து ப்ராஜெக்ட் ல இருந்து என்ன ரிலீஸ் பண்ணுங்க.. நான் இந்தியா போறேன்னு சொல்லியிருக்கா.. ரகு திடீர்னு அந்த மாதிரி அனுப்ப    முடியாது  இன்னும் six மந்த்ஸ் இருந்து முடிச்சிட்டு போங்கன்னு சொல்லிட்டாரு.. அப்பறம் ஒருநாள் என்கிட்ட கேன்டீன்ல வச்சி அழுதுகிட்டு  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நீ இல்லனா நான் செத்துடுவேன்னு சொன்னா.. எனக்கு கோவம்  வந்தாலும் அவளை பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. அதனால திரும்பவும் அவகிட்ட உன்னை பத்தி    விளக்கமா சொன்னேன்.. நான் இல்லன்னா நீயும்  அப்படித்தான்  ஆவேன்னு  சொன்னேன்.. அப்பறம் கோவமா எழுந்து போய்ட்டா.. ரெண்டு நாள் ஆஃபீஸுக்கு வரல.. அடுத்த நாள் நைட் ரகு கிட்ட  இருந்து phone வந்தது.. மோனா suicide    அட்டெம்ப்ட் பண்ணி ஹாஸ்பிடல்ல இருக்கான்னு. எனக்கு ரொம்ப கில்டியா இருந்திச்சி.. நானும் ரகுவும் உடனே ஹாஸ்பிடல் போனோம்.. ரகு வைஃப்பும் வந்தாங்க.. அவங்ககிட்ட எல்லாமே சொல்லியிருப்பா போல.. அப்பறம் அவ டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் ரகுவும் அவங்களும் என்னையும் மோனாவையும் கூப்பிட்டு பேசுனாங்க.. நான் பிடிவாதமா காவ்யாவை தவிர யாரையும் யோசிக்க முடியாது .. சாரின்னு சொல்லிட்டேன்.. அப்பறம் ரகு மோனாகிட்ட எடுத்து சொல்லி அவ பேரன்ட்ஸ்கிட்டயும் பேசி அவளை ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாரு. அவளும் ஊருக்கு போய்ட்டா”  என்று நிறுத்தியவன், முகத்தில் கலவரத்துடன் இருந்தவளை "ஹே காவ்யா.. இப்ப ஒண்ணும் ப்ராப்ளேம் இல்ல.. நான் நம்ம என்கேஜ்மெண்ட்க்கு ஊருக்கு வந்தேன்ல..அந்த டைம்ல அவளுக்கு மேரேஜ் ஆகிடிச்சி.. இப்போ 2  வீக்ஸ் முன்னாடி  ஒரு short term ப்ரொஜெக்ட்க்கு இங்க வந்திருக்கா போல.. பட் அவ நியூயார்க் ஆபீஸ்... எனக்கு நியூஜெர்சி ஆபீஸ்.. அதனால எனக்கும் அவளுக்கும் meet பண்ண கூட  அவசியம்   இல்ல.. அதுவில்லாம இப்போ  நிலைமை  வேற.. நமக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இதெல்லாம் எதுவும் சொல்லாம கயல் அக்கா மோனா இங்க இருக்கான்னு மட்டும் சொல்லியிருப்பாங்க.. அப்போ உனக்கு கஷ்டமாதான் இருந்திருக்கும்.." என்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “காவ்யா, நானும் நீயும் சேர்றதுக்கு எத்தனை  தடைகள் பாத்தியா.. எல்லாத்தையும்  மீறி நம்ம கல்யாணம் நடந்திருக்கு..இதோட அர்த்தம் நம்ம நல்லபடியா வாழறதுலதான் இருக்கு காவ்யா.. எந்த சூழ்நிலையிலும் நீ எது பண்ணாலும் அது கரெக்ட்ஆ தான்  இருக்குன்னு நான் 100% நம்புறேன் .. எப்பவும் நம்புவேன்.. அதேமாதிரி நீயும் நான் எது பண்ணாலும் அது கரெக்ட் ஆ இருக்கும்னு நம்பு.. உன் நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நானும் நடந்துப்பேன்.. உனக்கு தெரியாத என் வாழ்க்கையோட பக்கங்களையும் சொல்லிட்டேன்.. இத தவிர வேற எதுவும் இல்ல.. happy ஆ இப்போ"  என்ற ஆசை  கணவனை  அன்போடு  நெற்றில் முத்தமிட்டாள் காவ்யா.

பெண்கள் மயங்கும் பேரழகன் தன் அத்தான் என்பது அவளை   பெருமையடைய செய்தாலும் சற்றே கலக்கத்தையும் தந்தது.. ஆனாலும்  எத்தனை பெண்களை கடந்து வந்தாலும் தன்மீது உள்ள அன்பு துளியும் குறையாமல் தன்னை மட்டும் நேசிப்பவன் மீது காதல் இன்னமும் கூடத்தான் செய்தது அவளுக்கு.

"நீ லக்கி காவ்யா.. உனக்கு இந்த மாதிரி problems வந்தது இல்ல ரைட்? நீ படிச்சது எல்லாம் girls ஸ்கூல்ஸ் ..காலேஜ் கூட பெரியார்  மணியம்மை.. கேர்ள்ஸ் காலேஜ். அப்பறம் திருவிழா ஷாப்பிங் எல்லாம் குடும்பமா போவீங்க.. மாமாங்க ரெண்டு பேரையும் பாத்தாலே பசங்க தெறிச்சி ஓடிருவாங்க.. அதான் பாவம் நீ என்கிட்ட வந்து  மாட்டிக்கிட்ட" என்று சிரித்தவனோடு அவளும் சேர்ந்து சிரித்துக்கொண்டு "இல்ல அத்தான்.. கொஞ்ச நாள் ஹேமாவோட அண்ணன் என்னை சுத்தி சுத்தி வந்திட்டு இருந்தான்.. அவளை காலேஜ்ல ட்ராப் பண்றபோ,  பிக்கப் பண்ண வரப்போ என்னைப்பாத்து ஒரு மாதிரி சிரிப்பான்.. ஒருநாள் அவன்கிட்ட நானும் எங்க அத்தை பையனும் அலைபாயுதே ஸ்டைல்ல வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஹேமாக்கு  கூட தெரியாதுன்னு சொன்னேன்.. அரண்டு போய்ட்டான்” என்று பலமாய் சிரித்தவளை "அடிப்பாவி..பாவம் அவன்.. சரியான ஆளு நீ  " என்று தானும் சேர்ந்து சிரித்தான்.

மனதில் உள்ளதை அவளிடம் கொட்டிவிட்ட திருப்தியில் அரவிந்தும் தன் மீது அவனுக்குள்ள பரிசுத்தமான அன்பும் காதலும் தந்த திருப்தியில் காவ்யாவும் மனம்விட்டு பேசி சிரித்து பின்னர் களைத்து பின்னிரவில் உறங்கிப்போயினர்.

 

Sunday, October 25, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 3

 

சூட்கேசுகளை ஒன்றொன்றாய் பிரித்து, கொண்டு வந்த  பொருட்களை அதற்குரிய இடங்களில் அழகாய் அடுக்கி வைத்தாள் காவ்யா. அம்மாவும் அத்தையும் கொடுத்தனுப்பிய சாமி படங்களையும் பூஜை சாமான்களையும் இரண்டு பெட்ரூம்களில் சிறியதாக இருந்த ஒன்றில் ஒரு கப்போர்டில் அழகாய் அலங்கரித்து வைத்தாள்.

கையோடு கொண்டு வந்திருந்த தஞ்சாவூர் ஓவியங்களையும் காவ்யா வரைந்த  ஓவியங்களையும் அழகாய் ஹாலில்  இருவரும் சேர்ந்து நல்ல இடமாய் பார்த்து மாட்டினர். சமயலறைக்கு தேவையான பொருட்களையும் அடுக்கி வைத்தவள் இன்னும் வாங்கவேண்டியவற்றையும் குறித்துக்கொண்டாள். அவர்கள் உடைகள் அனைத்தையும் பெட்ரூம்களில் உள்ள கிளாஸ்ட்களில் இருவரும் கதைகள் பேசிக்கொண்டு அடுக்கிவைத்தனர்.

இரண்டு வருடங்களாக அவன் தங்கியிருந்த வீடு திடீரென மிகவும் அழகாக தோன்றியது அரவிந்தனுக்கு. "காவ்யா.. நீ என் வாழ்க்கையில வந்ததும் என் வாழ்க்கை எப்படி அழகா மாறிடிச்சோ, அதேமாதிரி நீ வந்ததும் இந்த வீடே அழகா மாறிடிச்சி" என்று அவள் கன்னத்தை செல்லமாய் பிடித்து கொஞ்சிக்கொண்டே சொன்னவன் போன் வரவும்  

 "ஒரு நிமிஷம்டா.. விவேக் கால் பண்றாரு.. பேசிட்டு வந்துடுறேன் " என்றுவிட்டு எடுத்து பேசினான். விவேக் அரவிந்தைவிட ஏழேட்டு வயது மூத்தவன்.  திருமணமாகி இரு குழந்தைகளுடன் அமெரிக்கா வந்து ஆறு மாதங்கள் ஆகின்றது.

"ஹாய் விவேக்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நான் என்னப்பா சொல்ரது.. நீதான் புது மாப்ள.. நீ எப்படி இருக்க"  என்றதும்

தன்னிச்சையாக வெட்கம் எட்டிப்பார்க்க "நான் நல்லா இருக்கேன்.. இன்னைக்குத்தான் கொஞ்சம் ஜெட்லாக் நார்மலா இருக்கு.. சோ திங்ஸ் எல்லாம்  அரேஞ் பண்ணிட்டு இருக்கோம்" என்றான்.

"சரிப்பா.. நாங்க இப்போதான் அட்லாண்டாலேர்ந்து வந்தோம்.. வந்ததும் உனக்குத்தான் கால் பண்றேன்.. நீங்க வர்ற நேரம் நாங்க ஊர்ல இல்லாம போய்ட்டோம்.. இப்போலேர்ந்து நீங்க செட்டில் ஆகுறவரை நம்ம வீட்லதான் சாப்பாடு.. காவ்யாவ கஷ்ட படவேணாமுன்னு சொல்லு.. கயல் ஏற்கனவே சொல்லிட்டா.. இன்னிக்கு நைட் டின்னருக்கு வந்திருங்கப்பா.. காவ்யாகிட்டயும் சொல்லிரு " என்றுவிட்டு  போனை வைத்தான்.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு, கூட வேலை பார்ப்பவர்களும் ஒரே கம்யூனிட்டியில் இருப்பவர்களும் தன் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்களும் ஒரே ஊர்காரர்களும் தான் சொந்தங்கள்.. ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் துணையாய் சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துக்கொள்வர்.

அரவிந்த் யூனிவெர்சிடியில் படிக்கும்போது அவனது நண்பர்கள் ஒரு பெரிய கூட்டமாய் இருந்தனர். பெரும்பாலானோர் கலிஃபோர்னியாவிலேயே செட்டில் ஆக, அரவிந்த் மட்டும் இந்தியாவில் வேலையில் சேர்ந்தான்.  ஆனால் விதி யாரை விட்டது.. அவனும் வேலை விஷயமாக அமெரிக்கா வரும்படி ஆனது. அவனது கிளையண்ட் ஆபீஸ் நியூயார்க் என்பதனால் அருகிலுள்ள மாகாணமான நியூஜெர்ஸியில் தங்கியிருந்தான்.

ரகு அவனுக்கு புதிய ப்ரொஜெக்ட்டை அசைன் செய்ததும் அதே வீட்டுக்கு  இன்னும் இரண்டு வருடங்களுக்கு லீஸை எக்ஸ்டெண்ட் செய்திருந்தான். அந்த கம்யூனிட்டி புதிதாய் கட்டப்பட்டிருந்தது... அதுவுமில்லாமல் lakeview எனப்படும் ஏரிக்கரை ஓரமாய் மரங்கள் சூழ்ந்து பார்ப்பதற்கும் மிகவும் ரம்மியமாய் இருக்கும். காவ்யாவுக்கும் மிகவும் பிடிக்கும் என நினைத்தான்.

அடுத்தடுத்த வீடுகளில் இந்திய குடும்பங்களும் அதிலும் நிறைய தமிழ் குடும்பங்கள் இருந்ததால் காவ்யாவுக்கு பேச்சுத்துணைக்கும் ஆள் இருக்கும் என்று அங்கேயே இருக்க முடிவு செய்தான். விவேக்கின் வீடு அதே கம்யூனிட்டியில்அடுத்த பிளாக்கில் இருந்தது.

ரகு மட்டும் கொஞ்சம் தள்ளி சிங்கள் பேமிலி ஹோம் எனப்படும் பெரிய வீட்டில் இருந்தான். அவன் கிரீன் கார்ட் ஹோல்டர் என்பதாலும் இங்கேயே செட்டில் ஆகும் பிளானில் இருப்பதாலும் கணவன் மனைவி இருவரும் பெரிய பதவிகளில் இருப்பதாலும் அவர்கள் வீடு பெரிதாகவே இருந்தது. இவர்கள் டீமில் எதாவது பார்ட்டி என்றால் மட்டும் ரகுவின் வீட்டில் வைத்து நடக்கும்.

 விவேக்கிடம் பேசிவிட்டுவைத்தவனிடம் "அத்தான் டீ சாப்பிடுங்க " என்றபடியே கைகளில் இரண்டு தேனீர் கோப்பைகளோடு வந்தவள் அவனிடம் ஒன்றை நீட்டினாள்.

காலையிலேயே குளித்து அழகிய வெளிர் மஞ்சள் நிற சுடிதாரில் லூஸ் ஹேரில் இருந்தவளை ரசித்துக்கொண்டே "என் அழகு பொண்டாட்டி.. இப்போதான் ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும்னு நெனச்சேன். கையில டீயோட வர .." என்று கப்பை வாங்கிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட, வெட்கத்தோடு "அத்தான் காலைலேர்ந்து இது 59 வது முத்தம்.. இன்னும் இன்னைக்கு எத்தனை மிச்சமிருக்கு.. " என்று வேண்டுமென்றே அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

"அடிப்பாவி நான் ஆசையா குடுக்குற முத்தத்தை எண்ணிட்டா இருக்க.. நடுவுல கேப் விட்டாதான எண்ணுவ.. உன்ன " என்றவன் அவளை இழுத்து பிடித்து முத்தமழை பொழிந்தான்.

"ஐயோ அத்தான் பால்கனி டோர் திறந்திருக்கு .. யாராவது பாக்க போறாங்க " என்று அவள் உதடுகள் சொன்னாலும் மனம் அவனது குறும்பை ரசித்தது. அவள் கொண்டு வந்த சூடான இஞ்சி டீ கோப்பைகளில் ஆறி கொண்டிருந்தது.

ணி ஐந்தானதும் இருவரும் வெளியே கிளம்பினர். அந்த மெட்டாலிக் சில்வர் BMW வில் ஸ்டைலாக அமர்ந்து டிரைவ் செய்யும் கணவனை பெருமையோடு பார்த்தவள் அமெரிக்காவின் ரோடுகளையும் பச்சை பசேலென மரங்களையும் ரசித்துக்கொண்டே வந்தாள்.

சிறு குழந்தையின் உற்சாகத்துடன் அனைத்தையும் ரசித்துக்கொண்டு அவனோடு பேசிக்கொண்டு வந்தவளை காதலோடு பார்த்தவன் "காவ்யா.. நீ சந்தோஷமா இருக்கியா.. உன்ன நான் நல்லா பாத்துக்கிறேனே ?" என்றான் திடீரென.

சட்டென்று சிரிப்பு வடிந்து கண்கள் காதலை ஏந்திக்கொள்ள "ஏன் அத்தான் இப்படி கேக்குறீங்க.. என்னைவிட எந்த பொண்ணும் இவ்ளோ சந்தோசமா இருப்பாளான்னு எனக்கு தெரியல.. மனசுக்கு பிடிச்ச கண் நிறைஞ்ச புருஷன்..என்னை அவங்க பொண்ணா நெனச்சி தாங்குற அத்தை மாமா, என் மேல உயிரையே வச்சிருக்கிற அம்மா அப்பா தாத்தா பாட்டி இன்னும் வேற என்ன அத்தான் ஒரு பொண்ணுக்கு வேணும்.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. என் வாழ்க்கை முழுசும் உங்களுக்கு நல்ல மனைவியா இருக்கணும்.. அது மட்டும் தான் என் மனசுல ஓடிட்டு இருக்கு "  என்றாள்.

"கேட்கவே சந்தோசமா இருக்கு காவ்யா.. ஆனா எப்பவும் எதுக்காகவும் என்கிட்ட தயங்காத.. இந்த கல்யாணம் தாலி புருஷன் பொண்டாட்டி எல்லாமே இந்த உலகத்துக்காகத்தான்.. மத்தபடி நான் எப்பவும் உன்னோட அதே அத்தான் தான்.. நீ என்ன நினைக்கிறாயோ அத பண்றதுக்கு உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு..எனக்காக நீ எதையும் மாத்தக்கூடாது எதையும் இழக்கக்கூடாது .. சரியா?" என்றவன் ஒரு கையால் டிரைவ் செய்துகொண்டே மறுகையை அவளது கையோடு கோர்த்துக்கொண்டான்.

து நியூஜெர்ஸியின் பெரிய மால். மிகவும் பிரமாண்டமாய் நூற்றுக்கணக்கான கடைகள் அணிவகுத்து நிற்க அங்கு கிடைக்காதவையே இல்லை என்ற அளவுக்கு அனைத்து உயர்தர பொருட்களும் குவிந்து கிடந்தன. பார்த்து பார்த்து அமெரிக்க வாழ்க்கைக்கு அவளுக்கு தேவையான பொருட்களை தேடி தேடி வாங்கினான். ஒவ்வொன்றயும் பார்த்து ஆச்சர்யபட்டவளுக்கு அனைத்தையும் விளக்கிச்சொன்னான். விவேக் வீட்டிற்கு டின்னருக்கு போவதால் அவன் குழந்தைகளின் வயதுக்கேற்ப விளையாட்டு பொருட்களையும் சாக்லேட்டுகளையும் வாங்கிகொண்டவனை ஆசையாய் பார்த்தாள் காவ்யா. எத்தனை பக்குவம் இந்த வயதில் இந்த அத்தானுக்கு என்று அவனை அணைத்துக்கொண்டு கைகள் கோர்த்து நடந்தாள்.

தன் ஆசை மனைவி தன்னோடு கைகோர்த்து நடப்பது புது தெம்பைதர ஏனோ அவனுக்கு அவள் வரைந்த அவனது ஓவியம் நினைவுக்கு வந்தது. ஆம்.. மனைவின் அன்பை வென்றவன் உண்மையில் ராஜகுமாரன்தான் என்று நினைத்து சிரித்துக்கொண்டவன் கம்பீரமாய் உணர்ந்தான்.

விவேக்கின் வீட்டில் நுழையும்போது மணி எட்டாகியிருந்தது. விவேக் கதவைத்திறந்து "வாங்க வாங்க " என்று முகமெல்லாம் சிரிப்போடு வரவேற்க உள்ளேயிருந்து வேகமாக வந்த விவேக்கின் மனைவி கயல்விழி, "வாங்க புது பொண்ணு புது மாப்பிள்ளை" என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். கதவை திறந்ததும் ரசத்தின் வாசம் மூக்கைத்துளைக்க காவ்யாவுக்கு எங்கோ தமிழ்நாட்டில் நுழைவதைப்போலிருந்தது.

அரவிந்த் ஸ்நேகமாய் சிரித்துக்கொண்டே "அக்கா எப்படி இருக்கீங்க.. அப்பறம் இதுதான் காவ்யா.. காவ்யா .. இவங்க தான் விவேக் அண்ட் கயல்விழி அக்கா. " என்று அறிமுகப்படுத்தினான். பட்டென்று "காவ்யா .. நீ என்னமா அழகா இருக்க.. இந்த அரவிந்த் இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காப்லயே.. பொண்ணு எப்படி இருக்குமோன்னு நெனச்சேன்.. நீதான் தம்பியைவிட சூப்பரா இருக்க" என்று வெள்ளந்தியாய் சொன்னவள் "உள்ள வாம்மா " என்று அழைத்து சென்றாள்.  சட்டென்று ஒருமையில் அழைத்தாலும் அவளது வெள்ளந்திக்குணம் காவ்யாவுக்கும் பிடித்துத்தான் போனது. அவர்களின் எட்டு வயது பையனும் மூன்று வயது பொண்ணும் வந்து அரவிந்தனிடம் ஒட்டிக்கொண்டனர். அவர்களிடம் "இவங்கதான் காவ்யா அத்தை.. இனிமே இவங்களும் உங்க friend சரியா " என்று அரவிந்த் சொன்னதும் காவ்யா அவர்களை அருகே அழைத்து அவர்களுக்கென்று வாங்கி வந்ததை கொடுத்து "ஹாய் " என்றாள். அவளிடம் எட்டு வயது வால் "where is your baby aunty?" என்று கேட்டதும் கயல் "இவன் ஒருத்தன்.. யாராவது கப்புலா வந்தா மொதல்ல பேபி பத்தி கேட்ருவான்" என்றாள் சிரித்துக்கொண்டே. அரவிந்த் காவ்யாவை பார்த்து சிரிக்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அனைவரும் சோபாவில் அமர்ந்து நலம் விசாரிப்புகள் , அவர்கள் திருமணம் மற்றும் மற்ற நண்பர்கள் என பேச்சு அங்குமிங்குமாய் சென்று கடைசியில் "சரி வாங்க சாப்பிடலாம்.. “ என்று டைனிங் டேபுளுக்கு அழைத்து சென்றனர்.

விவேக்கும் கயல்விழியும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதால் சமையல் காரசாரமாக காவ்யா வீட்டு சாப்பாடு போலவே  இருந்தது. நிறைய ஐட்டங்கள்  அதுவும் மிகவும் சுவையாய் செய்திருந்தாள் கயல்.  காவ்யா அவளை மனதார "அக்கா, ரொம்ப நல்லா சமைச்சிருக்கீங்க.. அப்படியே எங்க அம்மா செஞ்ச மாதிரி இருக்கு.. பாவம் அத்தான் இந்த மூணு நாலா சரியாவே சாப்பிடல.. இன்னிக்குதான் நல்லா சாப்பிட்டாரு.. அதுவும் அந்த மாங்கா தொக்கும் வெண்டைக்காய் பச்சடியும் ரசிச்சு சாப்பிட்டாரு.. அது எப்படி பண்ணீங்கன்னு சொல்லுங்கக்கா.. நான் நோட் பண்ணிக்கறேன்.. " என்று ஆசையாய் கேட்டவளை கயலுக்கும் மிகவும் பிடித்துப்போனது.  

 

சாப்பிட்டு முடித்ததும் குழந்தைகள் உறங்கிப்போயிருக்க ஆண்கள் இருவரும் பால்கனியில் உட்கார்ந்து அலுவலகம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

 

ஹாலில் அமர்ந்து காவ்யாவும் கயலும் அவரவர் குடும்பங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அரவிந்தனை பற்றி பேசும்போது அவளின் கண்களில் ஒளி கூடுவதை கவனித்த கயல் அவளுக்கு அரவிந்தன் மீதுள்ள அளவில்லா காதல் புரிந்தது. மெதுவாக "காவ்யா... அரவிந்த் ரொம்ப நல்ல பையன்.. நீ ரொம்ப குடுத்து வச்சவ.. என் வீட்டுக்காரருக்கு அவ்ளோ சாமர்த்தியம் பத்தாது.. ஆனா அமெரிக்கா வரணும்னு ரொம்ப ஆசை.. அரவிந்த் மட்டும் ரெகமெண்ட் பண்ணலேன்னா நாங்க வந்திருக்கவே முடியாது.. அதுவுமில்லாம இங்க வந்தும் இவருக்காக நெறைய ஹெல்ப் செஞ்சிருக்காப்ல .. அரவிந்த் பொதுவா எல்லாருக்கும் நல்லா ஹெல்ப் பண்ணுவாரு போல .. அதனால கொஞ்சம் பிரச்சனைல மாட்டியிருக்காரு.." என்றதும் சற்று பதட்டத்துடன் "என்னக்கா சொல்றீங்க?" என்றாள்.

"காவ்யா நான் சொல்றத உன் மனசோட வச்சிக்கோ.. இவங்க டீம்ல மோனான்னு ஒரு நார்த் இந்தியன் பொண்ணு இருக்கு.. அந்த பொண்ணு புதுசா வந்தப்போ அரவிந்த் நெறய ஹெல்ப் பண்ணியிருக்காரு..கொஞ்ச நாள்ல அந்த பொண்ணுக்கு இவரை பிடிச்சி போய் ப்ரொபோஸ் பண்ணியிருக்கா.. இவரு மறுத்துட்டாரு போல.. அந்த பொண்ணு இன்னும் இங்கதான் இருக்கா.. பாத்து இருந்துக்கோ.. இத ஏன் உன்கிட்ட சொல்றேன்னா நீ நம்ம பக்கத்து பொண்ணு.. அரவிந்த் ஆளு அம்சமா இருக்காரு.. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இதையெல்லாம் அவருகிட்ட கேட்டுக்காத" என்று சொல்லிமுடிக்கவும் அரவிந்தும் விவேக்கும் அங்கு வரவும் சரியா இருந்தது.

அரவிந்த் காவ்யாவிடம் "காவ்யா கிளம்பலாமா.. அக்காவும் நீயும் தினமும் மீட் பண்ணி பேசிக்கோங்க.. இப்போ ரொம்ப லேட் ஆகிடிச்சி" என்றான் சிரித்துக்கொண்டே.

"ஹ்ம்ம்  போலாம் அத்தான்.. "  என்று  சொன்னவளின் முகம் வாடியிருப்பதை கவனித்த அரவிந்த் யோசனையாய் அவர்களிடம்  சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

 

காரில் ஏறியவளின் முகம் இன்னமும் கலக்கமாக இருப்பதாய் அறிந்தவன் எதோ தவறாக இருப்பதாக உணர்ந்தான். ஒரு நிமிடம் வாய் ஓயாமல் எதைப்பற்றியாவது தன்னிடம் பேசிக்கொண்டிருப்பவள் அமைதியாக இருப்பது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மெதுவாக "என்னடா.. டயர்டா இருக்கா?" என்று ஆரம்பித்தான்.

 

"இல்லை அத்தான்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றவள் மனதில் புழுங்கிக்கொண்டிருந்தாள். அத்தான் தன்னைத்தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டார் என்பதை அறிந்திருந்தாலும் ஏன் தன்னிடமிருந்து மறைக்கவேண்டும்.. கண்களில் கண்ணீர் முட்டிகொண்டுவர கட்டுப்படுத்திக்கொண்டாள்.

வீட்டை அடைந்ததும் இறுக்கமாய் அணைத்தவனை "சாரி அத்தான்.. எனக்கு தூக்கமா வருது.. நான் போய் படுத்துக்கவா " என்றதும் கண்டிப்பாக எதோ நடந்திருக்கிறது என்று எண்ணியவனாக "காவ்யா.. ஒரு நிமிஷம் உட்காரு.. " என்று அங்கிருந்த சோபாவில் அவளை அமரவைத்து அருகில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சி சொல்லு? நீ எதையோ நெனச்சி கஷ்டப்பட்டுட்டு இருக்கன்னு எனக்கு நல்லா தெரியுது..ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு " என்று கண்களை பார்த்து கேட்டவனை பார்த்ததும் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழிய அதற்குமேல் பொறுக்கமுடியாமல் "அத்தான் மோனா பத்தி நீங்க என்கிட்ட ஏன் சொல்லலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு " என்றதும் பக்கென்று சிரித்தான்.

 "யாரு கயல் அக்கா சொன்னாங்களா.. லூசுப்பொண்ணே.. சரி நீ என்ன நினைக்கிற சொல்லு?" என்று சிரித்துக்கொண்டே அவள் கண்களை துடைத்தவாறு கேட்டான்.

"எனக்கு தெரியும் நீங்க என்னைத்தவிர யாரையும் லவ் பண்ணலன்னு.. ஆனா நீங்க என்கிட்ட இதுவரை எதையும் மறைச்சதில்லைன்னு நினைச்சேன் .. ஆனா " என்று மீண்டும் கண்களிலிருந்து கண்ணீர் கசிய சொன்னவளை அருகில் வந்து அணைத்துக்கொண்டான்.

 

"காவ்யா.. நம்ம ரெண்டு பேருக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களை நான் எப்பவும் உன்கிட்ட மறைச்சதில்லை .. இனிமேயும் மறைக்கமாட்டேன்.. ஆனா பொண்ணுங்க என்ன சைட் அடிச்சதையும் ப்ரொபோஸ் பண்ணதையும் உன்கிட்ட சொல்லி உன் மனச கஷடப்படுத்தவேணானும்னுதான் உன்கிட்ட சொன்னதில்லை.. "என்றதும் உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து கொண்டவள் "யாரெல்லாம் உங்கள சைட் அடிச்சாங்க சொல்லுங்க " என்றாள்.

 

"ஹ்ம்ம் அப்படியா.. அப்போ சரி.. மொதல்ல தஞ்சாவூர்லேர்ந்து ஆரம்பிப்போம்... எங்க பக்கத்து வீட்டுல சுமதி இருக்காளே அவ " என்றதும் டக்கென்று எழுந்து "சுமதியா ..நான் உங்கள லவ் பண்ணது அவளுக்கு நல்லா தெரியும்.. இருந்தாலும் உங்கள சைட் அடிச்சாளா.. அவளுக்கு இருக்கு " என்று சீரியஸா சொன்னவளை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"அதுக்கப்புறம் எங்கூட காலேஜிலே படிச்ச ஒரு பொண்ணு.. அதுக்கப்பறம் MS  படிக்கிறப்போ ஒரு பொண்ணு அப்பறம் இந்த மோனா .. அவ்ளோதான் " என்றான் பொய்யான வருத்தத்துடன். "அத்தான் விளையாடாதீங்க .. ஏன் இவங்களையெல்லாம் விட்டுட்டு என்ன லவ் பண்ணீங்க" என்று விடாப்பிடியாய் கேட்டாள்.

"ஹே லூசு.. ஊர்ல தேவதை மாதிரி ஒரு பொண்டாட்டிய வச்சிட்டு எவனாவது இன்னொரு பொண்ண லவ் பண்ணுவானா.. என்னை பொறுத்தவரை நீ எப்போவோ என் மனைவி ஆகிட்ட.. நான் எப்படி வேற யாருக்கும் ஓகே சொல்ல முடியும்.. ஒருவேளை நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தாக்கூட இன்னொரு பொண்ணு என் lifela  வந்திருப்பாளான்னு தெரியல.." என்றதும் கண்கள் கலங்க "சாரி அத்தான்.. நீங்க எப்பவும் சொல்றமாதிரி நான் லூசுதான்.. உங்களைப்போய் இப்படி சொல்லிட்டேன் ..ப்ளீஸ் அத்தான் இந்த மாதிரி இனிமே பேசமாட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க " என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

ஆதரவாய் அவளை அணைத்துக்கொண்டவன் மனதில் மோனாவை நினைத்து சற்றே சஞ்சலமானான்.

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...