Sunday, March 7, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 8


சற்றே மாநிறத்தில் தன்னைவிட அழகிலும் உயரத்திலும் குறைந்தவளாய், கண்களில் ஏற்றிக்கொண்ட அலட்சியத்தோடு தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளை பார்த்து நட்பாய் சிரித்த காவ்யா, "ஹாய் மோனா"  என்றவள் அரவிந்தனை பார்க்க, என்ன பேசுவது என்ற குழப்பத்தில் மோனாவை பார்த்து "ஹாய்" மட்டும் சொல்லி வைத்தான் அரவிந்தன்..


பட்டும் படாமலும் அவர்களை பார்த்து சிரித்தவள், அதற்குமேல் அவர்களை சேர்த்து பார்க்க முடியாமல் அங்கிருந்து நழுவி மற்ற பெண்கள் கூடியிருந்த இடத்திற்கு சென்றாள்.


காவ்யாவையும் அரவிந்தனையும் ரகுவின் மேனேஜர் டாமும் அவரது மனைவி மரியாவும் இருந்த இடத்திற்கு அழைத்துச்சென்ற ஷோபா, அழகிய ஆங்கிலத்தில் இருவரையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினாள்.


ஐம்பதுகளில் இருந்த டாம் "Hello Guys,  congratulations !! என்றவர்,  “Welcome to united states " என்று காவ்யாவை பார்த்து கைகளை கூப்பி வணங்க, அவரது மனைவி காவ்யாவை கண்கள் விரிய பார்த்தவாறு "Aww.. you look beautiful .. you guys are made for each other " என்று கைகளை குலுக்கினாள்.


முதன் முறை வெளிநாட்டவரோடு பேசுவதால் கண்களில் சற்று மிரட்சி தெரிந்தாலும், சுதாரித்துக்கொண்டு கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்தவள் இருவரையும் பார்த்து கைகள் கூப்பி "Thank you Mr. Tom and thanks for the complements Ms.Maria” என்ற காவ்யாவை பெருமையுடன் பார்த்து சிரித்துக்கொண்ட அரவிந்தன் தானும் டாமோடு கைகளை குலுக்கிவிட்டு “Thank you Tom” என்றான்.


விதவிதமான பதார்த்தங்கள் டைனிங் ஹாலில் உள்ள பெரிய டேபிளில் அழகாய் அடுக்கிவைக்கப்பட்டிருக்க, அங்கு அழைத்துச்சென்ற ஷோபா "Appetizers are here.. help yourself guys” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு "I will be right back “ என்று மற்ற விருந்தினர்களை கவனிக்க சென்றாள்.


வந்திருந்தவர்களில் பாதிபேர் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்பதால் மல்டி குஸைனில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், தென்னிந்திய பதார்த்தங்களின் நிறமும் மணமும் மரியாவை கவர்ந்திழுக்க, ஒவ்வொரு ஐட்டத்தை பற்றியும்  பின்னாலேயே வந்த  அரவிந்தன் மற்றும் காவ்யாவிடம் விளக்கம் கேட்க, அழகிய ஆங்கிலத்தில் ஒவ்வொரு உணவை பற்றியும் தெளிவாக அரவிந்தன் விளக்க, காவ்யா மரியாவிற்கு தேவையானவற்றை எடுத்துகொள்ள உதவினாள்.


கைகளில் உணவை ஏந்தியவாறு கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டே அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, காவ்யா அத்தனை ஆண்கள் மத்தியிலும் தனியாக தெரிந்த தன் அத்தானை ரசித்தவாறு பெயருக்கு எதையோ கொரித்துக்கொண்டிருந்தாள்.


உயர் அதிகாரிகளிடம் மரியாதை கலந்த தன்னம்பிக்கையுடனும், தன் வயதையொத்த நண்பர்களோடு அவர்களை கலாய்த்து நகைச்சுவையோடும் பெண்களிடம் பேசும்போது கண்ணியதோடு பேசுவதையும் கண்டு உள்ளூர மகிழ்ந்தவள் தனக்கு அவன் மீதுள்ள காதலும் மரியாதையும் பன்மடங்கு பெருகுவதை உணர்ந்தாள்.


அதே நேரத்தில், தூரத்தில் மற்ற பெண்கள் காவ்யா கட்டியிருந்த புடவையை பற்றியும், போட்டிருந்த நகையை பற்றியும் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டிருக்க, மற்ற பெண்களோடு பேசும் சாக்கில் மோனாவின் கண்கள் அரவிந்தனை ரகசியமாய் அளந்து கொண்டிருந்தன.


இந்த ஆறு மாதங்களில் இன்னும் அழகாய் தெரிந்தவன் முகத்தில் கூடிய வசீகரமுமாய் சிரித்த  முகமுமாய், அவ்வப்போது காவ்யா பேசுவதை குனிந்து அக்கறையாய் கேட்பதும் தன்னருகில் நின்றவாறே சாப்பிட்டுக்கொண்டிருந்த டாம் தம்பதியினருடன் தோள்களை குலுக்கி பேசிக்கொண்டுமிருந்தவனை காண மனம் பொறுக்காமல் காது மடல்கள் சூடாக, தனக்கு சொந்தமாகவேண்டியவன், இன்று எவளோ ஒருத்தியின் அருகில் என்று ஆத்திரத்தோடு காவ்யாவை பார்த்தாள்.


அனைவரையும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகோடு, சேலைதலைப்பை ஒற்றையாய் விட்டு அதை அழகாய் திறமையாய் கேரி செய்தவளை பொறாமை கலந்த ஆச்சரியதோடு பார்த்தவள், தான் ஒருநாள் அவர்களது டீமை சேர்ந்த அனில் மனைவியின் வளைகாப்புக்கு புடவை அணிந்து அது சொதப்பி, சோளக்காட்டு பொம்மை போல வந்து நின்றபோது அவளது டீமில் அனைவரும் சிரிக்க, ஒருபடி மேலே போய் கலாட்டா பேர்வழியான திலீப் "உனக்கு இதெல்லாம் தேவையா? " என்று நக்கலடிக்க அவனை கண்டிக்கும் தொனியில் பார்த்துவிட்டு அரவிந்தன் "you should have come in your comfortable outfit” என்று அக்கறையாய் சொன்னதும் நினைவுக்கு வந்தது. யாரோ ஒரு பெண்ணான தன்னிடமே அத்தனை அக்கறை காட்டியவன் தன் மனைவி மீது எத்தனை அக்கறையாய் இருப்பான்.. அந்த நினைப்பே அவளுக்கு காவ்யாவின் மீது வெறுப்பை தந்தது..


‘உன் அக்கறையும் உன் கண்ணியமும் தானே என்னை உன்னிடம் ஈர்த்தது.. எத்தனை நம்பிக்கையோடு இருந்தேன் .. நீ எனக்குத்தான் என்று... இன்று என் வாழ்க்கை நரகத்தைவிட மோசமாக மாறிவிட்டதே.. இதற்கெல்லாம் காரணம் இவள்தான்’  என்று எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது மோனாவுக்கு.


யாரை தன் வாழ்க்கையில் பார்க்கவே கூடாதென்று  நினைத்தேனோ  அவர்களையே பார்க்கும்படியாக ஆகிவிட்டதே.. இதைவிட்டால் எனக்கு வேறு வழியும் இல்லை.. அந்த பாவியிடம் இருந்து 6 மாதங்களாவது விலகியிருக்க இந்த வாய்ப்பை விட்டால் வேறு வழியில்லை.. தன் நிலைமையை நினைத்து கழிவிரக்கத்தில் மனம் கரைய காவ்யாவின் மீதான பொறாமையில் மனம் வெதும்பி தன் விதியை நொந்து கொண்டவள் மெதுவாக கூட்டத்திலிருந்து நழுவி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள்  சென்றாள். அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தபடியே போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம் எதிலும் பதிய மறுத்தது.


12 வயதான பர்த்டே பாய் ஆகாஷ் அவன் வயதையொத்த நண்பர்களோடு அறையிலிருந்த மானிட்டரில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்க, 3 வயதான அவன் தங்கையும் மற்ற சிறு குழந்தைகளும் காட்டுக்கத்தலோடு  அறையில் இருந்த விளையாட்டுப்பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.


பலமுறை சொல்லியும் கேளாமல் கத்திக்கொண்டிருந்த குழந்தைகளின் இரைச்சல் மோனாவை எரிச்சல் படுத்த போனை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியில் வர எத்தனித்தவள், அறையை நோக்கி காவ்யாவையும் அரவிந்தையும் ஷோபா அழைத்துக்கொண்டு வருவதை பார்த்ததும் உள்ளேயே நின்றாள்.


அறைக்குள் நுழைந்தவர்கள் மோனாவை பார்த்து புன்னகைக்க, ஷோபா தன் குழந்தைகளை அழைத்து  "hey guys, this is Aravinthan Uncle and Kavya aunty.. they wanted to see you”  என்றதும் அவர்களை வித்யாசமாக பார்த்த ஆகாஷ் "ஹாய்" என்றான் தயக்கத்தோடு. பொதுவாக குழந்தைகளின் பிறந்தநாள் பார்ட்டியாக இருந்தாலும் பெரியவர்கள் அவற்றை தாங்கள் கூடி பேசி மகிழும் சந்தர்பங்களாகவே மட்டும் கருதி குழந்தைகளை மறந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் சேர்ந்து ஒரு அறையில் விளையாடிக்கொண்டிருப்பர். கேக் வெட்டும் தருவாயில் மட்டும் வாழ்த்து தெரிவிப்பதோடு அவர்கள் கடமை முடிந்ததென்று வாங்கிவந்த உயர்தர கிப்ட்களை கூட அங்கங்கே வைத்துவிட்டு செல்வதுதான் வழக்கமாக இருக்கும் பெரும்பாலான பர்த்டே பார்ட்டிகளில்.


அதனாலேயே குழந்தைகளுக்கு வித்தியாசமாக தெரிய, அனைவரும் சட்டென்று அமைதியாகி அரவிந்தனையும் காவ்யாவையும் உற்று பார்த்துக்கொண்டிருக்க, குழந்தைகளின் உயரத்திற்கு இணையாக குனிந்து அமர்ந்த காவ்யா, அரவிந்தன் கைகளில் இருந்த அலங்காரமான பைகளில் ஒன்றை வாங்கி அதிலிருந்த LEGO NASA Apollo 11 Lunar Lander Building Kit ஐ ஆகாஷிடம் நீட்டி "Happy Birthday Aaksh” என்றாள் அழகாய் புன்னகைத்தபடியே. அரவிந்தும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க அவசரமாய்  "Thank you " என்றவனின் கண்கள் பரவசமாக  "wow.. Mom! you remember I wanted to buy this kit!! Yes! I love it “ என்றான்.


ஷோபாவும் சிரித்துக்கொண்டே " ஹ்ம்ம் காவ்யா.. யு ஆர் வெரி ஸ்மார்ட்.. you know who wants what..” என்றதும், தானும் புன்னகைத்துவிட்டு பெரிய உயர்தர சாக்லேட் பாக்ஸையும் எடுத்து ஆகாஷிடம் கொடுத்து "ப்ளீஸ் ஷேர் வித் ஆல் " என்றுவிட்டு எழ நினத்தவளை சட்டென்று யாரோ பிடித்து இழுப்பதாக உணர்ந்தவள் திரும்பி பார்க்க ரகுவின் மூன்று வயது மகள் " love you aunty" என்று  அவள் எதிர்பாராத தருணத்தில் காவ்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். 


குழந்தையின் அன்பில் ஆடிப்போனவள் அவளை வாரியணைத்து தானும் அவள் கன்னங்களில் முத்தமிட்டாள். காவ்யாவையும் குழந்தையும் ரசித்தவாறு நின்றிருந்த அரவிந்தனை பார்த்து எரிச்சலான மோனா, "ஷோபா, actually I have some work.. you guys carry on.. நான் இன்னொரு டைம் வரேன் " என்று வரவழைத்துக்கொண்டு மெல்லிய புன்னகையோடு சொல்ல, ஷோபாவும் "oh ok.. அப்போ கேக் கட் பண்ணிடலாம்.. ப்ளீஸ் இருந்து டின்னர் சாப்பிட்டு கிளம்பு மோனா "  என்றவாறு மற்ற ஏற்பாடுகளை கவனிக்க சென்றாள்.


அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த திலீப் அரவிந்தனை பார்த்ததும் "டேய் மச்சான்.. புது மாப்பிளை .. எப்படிடா இருக்க.. " என்று பெரிய சத்தத்துடன் பேசியவாறு  கீழிருந்து கையை அசைக்க "ஹாய் டா.. இதோ வரேன் “ என்றவன் "காவ்யா இவன் பேர் திலீப்.. நம்ம பாலாஜி பக்கத்துல இல்லாத குறைய இவன் தான் தீர்த்து வைப்பான்.. வா உன்ன introduce பண்றேன் " என்றவனிடம் "அத்தான் நீங்க போங்க நான் ஒரு 5 mins குழந்தைகளோட விளையாடிட்டு வந்திடுறேன் " என்றாள்.


"ஓகே" என்றவன் மோனாவும் அங்கிருப்பதை உணர்ந்து "சீக்கிரம் வந்துடு" என்றவாறு கீழே சென்றான்.


தானும் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளை "மோனா.. ஒரு நிமிஷம்.. நான் உங்களோட கொஞ்சம் பேசணும்.. பேசலாமா.. " என்றாள். சற்றே திடுக்கிட்டு 'என்ன பேசவேண்டும் என்னோடு இவளுக்கு.. ஒருவேளை அரவிந்தன் இங்கு நடந்ததை சொல்லியிருப்பானோ.. சே எத்தனை அவமானம் இவள் முன்' என்று எண்ணியவாறு "எங்கிட்டயா ? என்ன பேசணும் " என்று தயக்கத்துடன் கேட்டவளை "உட்காருங்க சொல்றேன்" என்றுவிட்டு தானும் அவளருகே அமர்ந்து அவள் கைகளை பற்றிகொண்டவள் "First of all, I am sorry Mona” என்றாள்.


"சாரியா? எதுக்கு " என்று குழப்பத்துடன் கேட்டவளை "மோனா, எனக்கு எல்லாமே தெரியும்.. அத்தான் எங்கிட்ட எல்லாமே சொல்லிட்டாரு.. அவருக்காக நீங்க உயிரை விட தயாரா இருந்தது அவரோட மனைவியா எனக்கு கஷ்டமா இருந்தாலும் ஒரு பொண்ணா உங்களோட வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது... உங்களோட விருப்பம் நிறைவேறாம போனதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நான் காரணமா போய்ட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க...”


என்றதும் ஆச்சர்யத்துடன் அவளை பார்த்த மோனா 'என்ன பெண் இவள்.. தன் காதல் கணவனை நேசித்த இன்னொரு பெண் என்றவகையில் தன் மீது எரிச்சல் கொள்ளாமல் தன் நிலைக்காக ஒரு பெண்ணாக வருத்தப்படுகிறாளே.. இத்தனை நல்லவளாக கூட ஒரு பெண் இருக்க முடியுமா' என்று நினைத்தவள் 'ஹ்ம்ம் ஏன் பேசமாட்டாள்.. அரவிந்தன் இப்போது அவள் சொந்தமாயிற்றே' என்ற நினைப்பு வரவும் சட்டென்று அவளை வெல்லும் வகையில் "hey that is ok.. good he didn’t accept..thank God.. now I got married to one of the most prestegious men in Delhi.. அவர் குடும்பம் இண்டியால விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரங்கள்ல ஒண்ணு.. and I know very well.. Aravinth liked me.. I hope பேமிலிக்காகவும் உங்கள டிசப்பாய்ண்ட் பண்ண வேணாம்ன்னுதான் he said no to me.. but நல்லவேளை .. அரவிந்த் ஓகே சொல்லிருந்தா இந்த மாதிரி புடவைய சுத்திட்டு பரிதாபமா நானும் நின்னிருப்பேன்.. இப்போ I am wife of great .. “ என்று சொல்லி முடிப்பதற்குள் "மோனா.. என்ன problem உங்க வாழ்க்கையில?"  என்று அவள் கண்களை பார்த்து காவ்யா கேட்டதும் சற்றே தடுமாறி " வாட்? ப்ரோப்ளேமா என் வாழ்க்கைலயா? என்ன உளர்ர?" என்று ஒருமையில் ஆரம்பித்தாள்.


"Mona, seriously I felt bad for you.. அத்தானை கல்யாணம் பண்ணமுடியாம போனாலும் நீங்க இன்னொருத்தர் மனைவி.. நீங்க இப்போ பழசெல்லாம் கொஞ்சம் மறந்திருப்பீங்க.. இருந்தாலும் எங்களை சேர்த்து பாக்கும்போது உங்களுக்கு கஷ்டமா இருக்கும்ன்னு தான் உங்ககிட்ட சாரி சொன்னேன்.. பட் நீங்க நினைக்கிற மாதிரி அத்தான் குடும்பத்துக்காகவும் நான் ஆசைப்பட்டேன்ங்கறதுக்காகவும் மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கல.. அவர் மனசு முழுக்க நான்தான் இருக்கேன்.. அத யார் வந்தாலும் மாத்த முடியாது.. ஒருவேளை அவருக்கு என்னை பிடிக்காம போயிருந்திச்சின்னா, அவருக்கு பிடிச்ச பொண்ணோட சேர்த்து வைக்கறது தான் என்னோட முதல் வேலையா    இருந்திருக்கும்.. ஏன்னா நான் அவரை உண்மையா நேசிக்கிறேன்..எந்த நேரத்திலயும் அவரை தரக்குறைவா பேசியிருக்கமாட்டேன்.. என் அத்தான் பெரிய ராயல் பேமிலியா இல்லாம இருக்கலாம்.. ஆனா அவர் மனசுல நான்தான்  மகாராணி.. எனக்கு அதுபோதும்.. இப்பவும் சொல்றேன் உங்க லைஃப் நீங்க சொல்றமாதிரி இல்ல.. you are in trouble.. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா எப்பவும் தயங்காம எங்களை கேட்கலாம் " என்று விட்டு விருட்டென்று வெளியில் சென்றவளை சற்றே பயம் கலந்த குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் மோனா. — with Jayanthi Venkat and 13 others.

No comments:

Post a Comment

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...