Sunday, March 28, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 15

 

 

அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்" என்று குளியறைக்குள் புகுந்தான்.

அவன் வெளியே வரும்வரை காத்திருந்தவள்  "இப்போ திலீப் அம்மா எப்படி இருக்காங்க அத்தான்?" என்று எதுவும் தெரியாதவள் போல் கேட்டதும் கண்கள் சற்றே கலங்க அதற்குமேல் அவளிடம் பொய் சொல்லும் சக்தி இன்றி அவளை இறுக அணைத்தவாறு நடந்ததை முழுதும் சொல்லி முடித்தான். தன் அப்பா தங்கள் ஜாதகத்தில் உள்ள குறை பற்றி சொன்னதையும் சொல்லிமுடித்தான்.

"எங்க நான் இந்த நைட் டைம்ல  மோனாக்கு ஹெல்ப் பண்ண போறது உனக்கு பிடிக்காம நமக்குள்ள பிரச்னை வந்திருமோன்னு தான் பொய் சொல்லிட்டு போனேன்டா.. ஆனா இந்த சின்ன பொய் என்னை உறுத்தி எடுக்குது.. நீ என்னை பத்தி என்னை நினைச்சாலும் சரி ஆனா நான் உனக்கு உண்மையா இருக்கனும்ன்னு தான் இப்போ எல்லாத்தையும் கொட்டிட்டேன்.. என்னை மன்னிச்சுடு.." என்றான்.

அவன் குற்றஉணர்ச்சியில் பேசியதை தாளமாட்டாமல்  "அத்தான் ப்ளீஸ் நீங்கதான் என்னை மன்னிக்கணும். அந்த ஹோட்டல் ரூம்ல உங்க குரலை கேட்டதும் நான் ஏன் அழுதேன்? அதுக்கு எதாவது காரணம் இருக்கும்னு நம்பாம எனக்கு எதுக்கு அழுகை வந்தது..அப்போ எனக்கு உங்க மேல இருக்குற நம்பிக்கை குறைஞ்சி போயிடிச்சா? அத நெனச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தான் " என்றவாறு மோனா கால் செய்தது, அவள் லைனில் இருக்கும்போது அவர்கள் இருவரும் பேசியது என அனைத்தும் சொல்லி முடித்தாள்.

 

"இட் ஐஸ் ஓகே டா. இதுக்கெல்லாம் காரணம் நான்தானே.. நான் உன்கிட்ட உண்மையை சொல்லிட்டு போயிருந்தேன்னா நீ யாரு என்ன சொன்னாலும் நம்பியிருக்க மாட்ட.. ஆனா எனக்கு அப்பா சொன்னது மனசுல இருந்ததால அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்" என்றான்.

"அத்தான்.. நானும் ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்லணும்.. மாமா உங்ககிட்ட சொன்ன அதே விஷயத்தை அப்பா என்கிட்டயும் சொல்லிட்டாரு.. நான் உங்களுக்கு தெரிய வேணாம்.. தெரிஞ்சா வருத்தப்படுவீங்கன்னு நெனச்சேன்.. நீங்களும் எனக்கு தெரிஞ்சா வருத்தப்படுவேன்னு நெனைச்சிருக்கீங்க. பரவாயில்ல அத்தான்.. இந்த சம்பவத்துனால நம்ம ரெண்டு பேருக்கும் உண்மை தெரியும்னு நமக்கு தெரிஞ்சிருச்சி.. அதுவும் இல்லாம ஜாதகபொருத்தத்துக்கு மேல கடவுள்ன்னு ஒண்ணு இருக்கு.. நம்ம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற காதலும் நம்பிக்கையும் அந்த கடவுளுக்கு சமமா பரிசுத்தமானது.. நம்மள இந்த ஜாதக குறை எதுவும்  பண்ணாது அத்தான்” என்று சொல்லியவாறே அன்புடன் அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தாள் காவ்யா. அவளை நெஞ்சார அணைத்துக்கொண்டான் அரவிந்தன்.

 

3 comments:

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...